Monday, January 14, 2008

என்னைக் கொன்று விடுவார்கள் தெஹல்கா செய்தியாளர் திடுக்கிடும் தகவல்


என்னைக் கொன்று விடுவார்கள் தெஹல்கா செய்தியாளர் திடுக்கிடும் தகவல்



இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையாளர்களின் நேரடி வாக்கு மூலங்களை உலக அரங்கில் அம்பலப்படுத்திய தெஹல்கா செய்தியாளர் ஆசிஸ்கேதானுக்கு சங் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இத்தகவலை ஆசிஸ் கெதான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். படுகொலைகளையும் பாலியல் வக்கிரங்களையும் இழைத்தவர்களும், சராசரி குஜராத்திகளும் கூட நடந்த பாதகச் செயல் குறித்து வெட்கப்படுவதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு குஜராத்தியின் மனதிலும் விஷம் நிறைந்திருக்கிறது என்று வேதனை தெரிவித்த ஆசிஸ் கேதான் தன்னை கொலை செய்ய இரண்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சுற்றி வளைத்தது. நான் இரண்டு வாகனங்களில் உள்ளவர்களையும் நேரடியாகப் பார்த்தேன் நுண்ணிய காமெராக்களால் நான் படம் பிடித்து வேன் என எண்ணியதாலோ எண்ணவோ அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.

நான் என கடமையைச் செய்தேன் அது சிலருக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. அந்த சமூக விரோதிகள் தொலைபேசி வழியாகவும் ஈலிமெயில் மூலமாகவும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். கொலையாளிகளின் பட்டியலில் என்பெயர் உள்ளது. நான் கொல்லப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது என மனம் வெதும்பி A.F.P என்ற வெளி நாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஆசிஷ் கேதான்

No comments: