Sunday, October 28, 2007

இந்தியாவிற்கு அதிக வருவாயைத் தருவது யார்?

அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டுவதில் சீனா, மெக்சிகோ ஆகிய முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளி, நம்நாடு முதன்மை பெற்றுள்ளது.
உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் இதைத் தெரிவிக்கிறது.வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம், இந்தியாவுக்கு ஓர் ஆண்டுக்குக்கு 25.7 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் ஆகும். உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவுக்கு 22.5 பில்லியன் டாலரும், மெக்சிகோவுக்கு 24.7 பில்லியன் டாலரும் அந்நிய செலாவணியாகக் கிடைக்கின்றன.
இந்தியாவிற்கு வெளிநாட்டில் பணிபுரிபவர் களின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி மேற்கண்ட முன்னணி நாடுகளையும் முந்தி விட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் ஈட்டுகின்ற வருவாய் நாட்டின் நட்டுமொத்த ராணுவ செலவினைக்கு நிகரானதாகும்.
தேசிய நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையை விட, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியா ஈட்டும் தொகை 5 மடங்கு அதிகமாகும்.
வருமான வரி, மற்றும் சொத்துவரி மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருவாயை விடவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாகும்.வெளிநாடுகள் நம் நாட்டில் செய்துள்ள நேரடி முதலீடுகளை விடவும் இத்தொகை மூன்று மடங்கு அதிகம் என்பது வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய செய்தியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 விழுக்காட்டிற்கு இது சமமானதாகும்.
இந்தியாவிற்குக் கிடைக்கும் அந்நிய செலா வணியை அளிப்பதில் கேரளமும், தமிழகமும் முன்னிலை வகிக்கின்றன. கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன. திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கல்வி மையம் நடத்திய ஆய்வில் கேரளத்தில் 25 விழுக்காடு ஊர்களில், குடும்பத்திற்கு குறைந்த பட்சம் நால்வர் வெளிநாட்டில் பணிபுரிவது தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலிருந்து சுமார் 10 மில்லியன் பேரும், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிலிருந்து சுமார் 11.5 மில்லியன் பேரும் வெளிநாட்டில் பணிபுரிவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அந்நியச் செலாவணியின் பெரும் பகுதி நிதியை அனுப்புபவர்கள், மருத்துவ, பொறி யியல், கணிணித்துறை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அல்ல, சாதாரணக் கூலி வேலைக்காகச் சென்றவர்கள் என்பது ஆச்சர்யமான உண்மையாகும்.மேற்கண்ட தகவல்கள் உலக வங்கியால் வெளியிட்டப்பட்டவை ஆகும். சொந்தங் களைப் பிரிந்து, பிறந்த மண்ணைத் துறந்து, வெளிநாடுகளில் கடும் உடலுழைப்பை மேற் கொள்பவர்கள் தான் இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டையே ஈடு செய்கின்றனர். இவற்றில் மிகப்பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. இத்தகைய மிகப்பெரிய உதவியை சொந்த நாட்டிற்குச் செய்து கொண்டிருப்பவர்களின் நிலை இங்கு எப்படி உள்ளது?
வருவாய் தேடி, பாலைவனம் நோக்கி சிறகடித்த, விசாப் பறவைகளின் நிலை, பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. சிறப்புச் சலுகைகள் தரப்பட வேண்டிய அவர்களுக்கு, உரிய உரிமைகள் கூட மறுக்கப்படுவதை அறிந்தால் மனம் கசக்கும்.
வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நாடுதோறும் சொந்த பந்தங்களைப் பிரிந்து தூரதேசங்களில் உழைப்பவர்களின் குடும்பங் களில் பிரச்சினை என்றால், அவர்களை அலைக்கழிப்பது, பணம் பிடுங்குவது, போன்ற மனசாட்சியற்ற செயல்களும் இங்கு அரங்கேறுவது நம் கவனத்திற்கு வருகின்றன. நாட்டிற்கு வருமானம் ஈட்டிக் கொடுப்பவர் களின் பிள்ளைகளுக்கு கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க மற்றவர்களை விட அதிகக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது.
இந்தக் குறைபாடுகள் களையப்படுவது தான் நாட்டின் நன்றியுணர்ச்சிக்கு அடையாளமாக இருக்கும்.

Saturday, October 27, 2007

சுனிதா வில்லியம்ஸ் ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவரா அல்லது முஸ்லிமா?

சுனிதா வில்லியம்ஸ் ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவரா அல்லது முஸ்லிமா?பிரபல(?)ப்படுத்தப்பட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் இந்தியா வந்திருந்த போது குஜராத் மாநிலத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அஹ்மதாபாத்தில் ரோட்டரி கிளப் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் விமானப் படை பயிற்சி பள்ளியில் சேர்ந்த எனக்கு இராணுவ கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில் என் குடும்பத்தினரின் ஆர்.எஸ்.எஸ் பாணியிலான கட்டுப்பாடுகளை கடை பிடித்ததே காரணம். குறிப்பாக எனது தந்தை ஆர்.எஸ்.எஸ் உடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டவர்' என்றும் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இணையதளங்களில் இந்த செய்திகள் பரப்பப்படுகின்றன. மேலும் ராமர் பாலம் இருப்பதற்கான ஆதார போட்டோக்களை நாசாவில் இருந்து கொண்டு வந்ததாகவும், மேலும் அந்த வலைதளங்களில் கூறப்படுகிறது.
ஆனால் இச்செய்தி உண்மையில்லை என அந்நிகழ்ச்சியை நடத்திய ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். காந்தியை கொன்று விட்டு, காந்தியே ஆர்.எஸ்.எஸ் பற்றி வெகுவாக புகழ்ந்ததாக கூறும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் சுனிதா வில்லியம்ஸையா விட்டு வைப்பார்கள்.
இது தெரியாமல் முஸ்லிம்களில் ஒரு கும்பல் சுனிதா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாக ஒரு பொய்யான செய்தியை எஸ்.எம்.எஸ் எனும் குறுந்தகவல்கள் மூலம் பரப்பிக் கொண்டிருப்பது தான் வேடிக்கை.

சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு சட்டம்

சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு சட்டம்சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது
சட்டமன்ற வரலாற்றில் இது ஒரு பொன்னாள்; சமூகநீதி வரலாற்றில் புரட்சிகரமான நாள் லி முதல்வர் கலைஞர் உருக்கம்
தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் (22.10.2007) தாக்கல் செய்தார். இச்சட்ட முன் வடிவை ஆதரித்து பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) ஜி.கே. மணி (பாட்டாளி மக்கள் கட்சி) பால பாரதி (இ.கம்யூனிஸ்ட்) ராமசாமி (வ.கம்யூனிஸ்டு) செல்வப் பெருந்தகை (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர். மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு சட்டமசோதாவை முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இம்மசúôதா குரல்வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக சட்ட மசோதாவை வரவேற்று பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:லி
இந்த மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த நாள் சமூக நீதிக்கான போராட்டத்தில் மற்றும் சட்டமன்ற வரலாற்றில் ஒரு பொன்னாள். சமூகநீதி வரலாற்றில் ஒரு புரட்சிகரமான நாள். 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி வரலாற்றில் இதற்கான விதை ஊன்றப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பல்வேறு தலைவர்களால் சமூகநீதிக் கான போராட்டம் முன் எடுத்து வரப்பட்டது. இதற்காக எத்தனை தடங்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இப்போராட்டம் முற்று பெறவில்லை. தொடர்ந்து நடைபெறும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டத்தை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.