Wednesday, December 12, 2007

என்னதான் நடக்கிறது மலேசியாவில்...?

என்னதான் நடக்கிறது மலேசியாவில்...?
திரு. வீரபாண்டியன் (சன் டி.வி அரசியல் விமர்சகர்)
சிங்கப்பூர் வானொலி முன்னாள் தயாரிப்பாளர்)



இந்தியாவைப் போலவே மலேஷி யாவும் பிரிட்டிஷ் காலனி நாடாயிருந்தது. பின்னர் 1957 ஆகஸ்டில் விடுதலை பெற்றது. மலாயாவுக்கு (மலேஷியாவின் பழைய பெயர்) விடுதலை கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும் போது, ஆங்கிலேயர்கள் ஒரு முக்கிய மான நிபந்தனையை விதித்தனர். 'உழைப்புக் கூலிகளாக இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் கொண்டு வரப்பட்டு மலாயா மண்ணையே தங்கள் வாழ்விடமாக ஏற்று வாழ்ந்து வரும் இந்திய, சீன வம்சா வழி மக்களுக்கும் பூர்வீக மலாய் மக்களைப் போல குடியுரிமை வழங்க வேண்டும்' என்பது தான் அந்த நிபந்தனை. மலாயாவின் அன்றைய தேசியத் தலைவர்கள் இதனை மனமுவந்து ஒப்புக் கொண்டனர். அதன்படி சுதந்திரத்துக்கு முன்னர் யார், யாரெல்லாம் மலாயாவில் வாழ்ந்து வந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் இனப் பாகுபாடின்றி குடியுரிமை வழங்கப்பட்டது.

பிரிட்டீஷ் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் தொழிலா ளர்கள் ஏராளமான உரிமைகளையும் வாழ்க்கை வசதிகளையும், மேம்பாடு களையும் அடைந்து மேன்மையோடு வாழத் தலைப்பட்டனர். அந்த நாட்டின் பூர்வீகத் தாய்மொழியான மலாய் மொழி தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறவியிலேயே மொழி வல்லமை மிக்குடையவர்களான தமிழர்கள் (இர்ழ்ய் கண்ய்ஞ்ன்ண்ள்ற்ள்) மலாய் மொழியைக் கற்றுத் தேர்ந்து பூர்வீகக் குடிகளோடு இரண்டறக் கலந்தனர். பள்ளிகளில் சீனமொழியும், தமிழும் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப் பட்டது. சிறுபான்மைச் சமுதாயமான மலாய் அல்லாதார் தங்கள் மொழியை ஒரு பாடமாகப் பயில அனுமதிக்கப் பட்டனர். தமிழ் வானொலியும், தொலைக் காட்சியும் இருபத்து நான்கு மணிநேரமும் இன்னிசை முழங்கி இன்பத்தில் ஆழ்த்துகின்றன. திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் கொடிகட்டிப் பறக் கின்றன. தமிழ்நாட்டுக் கலைஞர்களும், பேச்சாளர்களும் அடிக்கடி அங்கே சென்று பைந்தமிழ் முழங்கிப் பரவசப் படுத்தி விருந்துண்டு வெற்றியோடு திரும்புகின்றனர்.

இந்தியத் தமிழர்கள் ஏராளமானோர் இப்போது மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாவும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அந்த நாட்டின் மிகச் சிறந்த கல்விமான்களில் பலர் தமிழர்கள் என்பது உலகறிந்து உண்மை. நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வார்த்தையில் சொல்வதாயிருந்தால் 'தாய் நாட்டுத் தமிழனை விட மலேஷியத் தமிழன் மகிழ்ச்சியாயிருக்கிறான்'. அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 3. தமிழ் வார இதழ்கள் ஆறும், மாத இதழ்கள் ஏழும் வெளிவருகின்றன. மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் மட்டும் 14க்கும் மேற்பட்ட திரையரங்கு களில் தமிழ்ப்படங்கள் திரையிடப்படு கின்றன. நாடு முழுவதும் ஏறத்தாழ 30 அரங்குகளில் தமிழ்ப்படங்கள் வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

மலேஷியத் தமிழர்களின் நலனுக் காகவே தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் மலேஷிய இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா) இதன் புகழ் பூத்த தலைவரா யிருக்கும் டத்தோ ஸ்ரீ சாமிவேலு, அந்த நாட்டின் கேபினட் மந்திரியாயிருக்கிறார். இவரோடு திரு. பழனிவேலு போன்ற மேலும் மூன்று பேர் துணை அமைச்சர்களாயிருக்கின்றனர். இவர்களை அல்லாமல் 3 பேர் நாடாளு மன்ற உறுப்பினர்களாகயிருக்கின்றனர். சிற்றூர்களிலும், நகராட்சிகளிலும் பல முக்கியமான பொறுப்புகளைத் தமிழர்கள் வகிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த நாட்டின் தலைமை நீதிபதியாகவே 'அஜித் சிங்' என்னும் இந்தியர் பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும் பலர் நீதிபதிகளாக இப்போதும் பணியாற்று கின்றனர். நாடாளுமன்ற செயலர்களாக (ல்ஹழ்ப்ண்ம்ங்ய்ற்ஹழ்ஹ் நங்ஸ்ரீங்ற்ஹழ்ண்ங்ள்) நம்மவர்கள் பலர் சிறப்பாகச் செயலாற்றுகின்றனர்.

1965ஆம் ஆண்டு வரை ஒரு மாநில மாயிருந்த சிங்கப்பூர், தனி நாடாகப் பிரிந்து சென்றது. அது முதல் உலக வரைபடத்தில் சிங்கப்பூர் குபேரபுரியாகக் கோலோச்சத் தொடங்கியதைக் கூறத் தேவையில்லை. சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகார மொழியாக அங்கீகரிக்கப் பட்டது. நாணயத்தில் தமிழ் பொறிக்கப் பட்டது. சீனர்களுக்கு மட்டுமல்ல: எல்லா இன மக்களுக்கும் பொதுவான நாடு' என்று சிங்கப்பூர் பிரதமர் சொல்லி மகிழ்ந்தார். ஆனால், மலேசியா தனது மலாய் மொழியையே ஆட்சி மொழி யாக்கி அழகு பார்த்தது. அந்த மொழியைக் கற்றவர்கள் மட்டுமே அதிகாரத்துக்கும், அரசுப் பதவிகளுக்கும் வர முடியும் என்ற நிலை வந்தது.

மலேஷியாவின், மண்ணின் மைந்தர் கள் (பூமி புத்ரா) எனப் பூர்வீகக் குடிமக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அவர்கள்,
1. பரம்பரை, பரம்பரையாக மலேஷியா வில் வாழ்வோராயிருக்க வேண்டும்.
2. மலாய் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்க வேண்டும்.
3. இஸ்லாத்தைச் சேர்ந்தவர்களா யிருக்க வேண்டும்.
இந்த விதிகளுக்குள் வருவோர் மட்டுமே, 'பூமி புத்ரா' என அழைக்கப் படுவர். இந்த விதிகளை வகுத்ததோடு மட்டுமின்றி, மலேஷிய அரசாங்கம், தங்களுடைய நாட்டை ஓர் இஸ்லாமிய நாடு (பட்ங்ர்ஸ்ரீழ்ஹற்ண்ஸ்ரீ ஸ்ரீர்ன்ய்ற்ழ்ஹ்) எனப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்ட பூர்வமான மத வழிப்பட்ட இஸ்லாமிய நாட்டில் அரசாங்கத்தின் மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே முன்னுரிமை பெறுவது உலகெங்கும் நடைமுறையில் உள்ளதுதான்.

நிலைமை இவ்வாறிருந்தும், பூர்வீகக் குடிமக்களான மலாய் மக்கள் மத்தியில் மன நிறைவு இல்லாமலிருந்தது. அதற்குக் காரணம் அந்தச் சமூக மக்கள் பெரும் பாலும் கடற்கரை ஓரங்களில் மீன்பிடித் தொழிலைச் செய்து படிப்பும், முன்னேற்ற முமில்லாமல் வாழ்ந்ததுதான். இயற்கையி லேயே ஊக்கம் மிகுந்த சமூகமான சீனர்களும் இந்தியர்களும் வர்த்தகத் திலும், வேலை வாய்ப்பிலும் மிக முன்னணிக்கு வரத் தொடங்கினர். பொதுத் தேர்தல்களில் நகர்ப் புறங்களில் சீனர்களே வெற்றி பெற்றனர். இவற்றைக் கண்ட மலாய் சமூகத்தினரை தங்கள் எதிர்காலம் பற்றிய அச்சம் ஆட் கொண்டது. கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வேண்டுமெனப் போராடினர்.

1969 ஆம் ஆண்டு மே 13 அன்று மலேசியாவில் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. பெரும்பான்மை மலாய் மக்களுக்கும், சீனர்களுக்கும் ரத்தவெறி கொண்ட யுத்தம் நடந்தது. தெரு வெல்லாம் பிணங்கள் விழுந்தன. இறுதியில் அரசாங்கம் மலாய் மக்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 30 விழுக்காடு இட ஒதுக் கீட்டைச் செய்தது. 26 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் எட்டு விழுக்காட்டினராயிருக்கும் இந்தியர் களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் ஒதுக்கியது மலேசிய அரசு. கலவரம் நடந்த அந்த நாளை இன்று வரை மலேசிய வரலாற்றில் 'கறுப்பு நாள்' என்று அழைக்கின்றனர்.

போராட்ட உணர்ச்சியோடு போர்க் கோலம் பூண்ட பூர்வீகக் குடிமக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்த மலேசிய அரசு, இந்திய சீன சிறுபான்மை மக்களுக்கும் நியாயம் வழங்கித்தானிருக்கிறது. இலங்கையைப் போலவோ, ஏனைய உலக நாடுகளில் தமிழர்களுக்கு நிகழ்ந்ததைப் போலவோ 'இன ஒதுக்கல்' எதுவும் அங்கே நடைபெறவில்லை. திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற நமது தமிழர்கள் இன்று வரை இங்கே வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். சம்பாதிக்கிற செல்வத்தைக் கொண்டு வந்துலிதமிழ்நாட்டில்தான் சொத்துகளை வாங்குகின்றனர். கூத்தாநல்லூர், கடைய நல்லூர், தோப்புத்துறை போன்ற வட்டாரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தமிழ் மண்ணுக்கு ஏராளமான வருவாயை ஈட்டிக் கொடுக்கின்றனர். அந்த நாட்டில் சம்பாதிப்பதை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்கிற எந்த நிபந்தனையும் மலேசிய அரசு விதிப்பதில்லை என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இதுதான் மலேஷியாவின் பூர்வ கதை. இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இனி நாம் சற்று ஆழமாய்ப் பார்ப்போம்.

மலேஷியாவின் பிரதானமான தொழிலாய் இருந்த ரப்பர் தோட்டங்கள் லாபகரமாய் இல்லாததால், அவை இப்போது செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன. பல தனியார் தோட்டங்கள் அரசுடைமையாக்கப் படுகின்றன. அவ்வாறு அரசுடைமையாக் கப்படும்போது அங்கே குடியிருப்பு வசதிகளை அரசே செய்து கொடுக்கிறது. அந்த இடத்தில் இருந்த கோவில்களோ, பள்ளிவாசல்களோ அகற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. புதிய குடியிருப்புகளில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைத் தொழிலாளர்கள் அமைத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தி யது. பத்து கோவில்கள் இருந்த இடத்தில் ஒரே ஒரு கோவிலுக்கு இடம் கொடுப்பதாக அரசு சொல்கிறது.

உருவ வழிபாட்டில் நம்பிக்கை யில்லாத இஸ்லாமிய அரசு, உருவ வழிபாடு கொண்ட இந்து சமயக் கோவில்களைத் தடை செய்ததில்லை. 'செந்தூர் முருகன்' கோவிலும், 'பத்துமலை முருகன் கோவிலு'ம் தைப்பூசவிழா கொண்டாடி மகிழ்கின்றன. நாடெங்கும் ஏராளமான சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில்களும் பரந்து காணப்படுகின்றன. 59 சதவீத மலாய் முஸ்லிம்கள் இருக்கும் நாட்டில் 4,000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் 8 சதவீத இந்தியர்கள் வாழும் நாட்டில் 17,000 இந்துக் கோவில்கள் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன என்பது உன்னதமான வரலாறு அல்லவா? (அரசாங்கமே நிதியுதவி கொடுத்துக் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடத்தி பிரதமர் பரிவட்டம் கட்டிக் கொண்ட காட்சியை நாமே பார்த்து ரசித்திருக்கிறோம். இதற்கிடையில் அரசாங்கத்தின் பொது இடங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் கட்டப்படும் கோவில்களை அரசு அப்புறப்படுத்தத் தானே செய்யும்? அவ்வாறு அத்துமீறிக் கட்டப்பட்ட கோவில்களும் பள்ளிவாசல் களும் ஆயிரக்கணக்கில் அப்புறப் படுத்தப்பட்டதைக் கடந்த காலம் கண்டிருக்கிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அங்கே வாழும் குடியுரிமை பெற்ற தமிழர்கள், இதுநாள் வரை இதைப் பிரச்சினை ஆக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகக் கணினி விற்பன்னர் களாகவும், உயர் தொழில் நுட்பக்காரர் களாகவும் அங்கே சென்ற இந்தியர் சிலர் 'இந்துக் கோவில்களுக்கு ஆபத்து' என்கிற விஷ விதையை ஊன்றத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது இந்தக் கருத்தின் உள்நோக்கம் புரியாத பூர்வீகத் தமிழர்களும் இதற்குப் பலிகடா ஆகியிருப்பதுதான் பரிதாபமான செய்தி. மலேஷிய பல்கலைக் கழகத்தில் இந்தியப் பிரிவு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே 'தமிழ் கலை, இலக்கியத்திற்கே இதுகாறும் முக்கியத்துவம் தரப்பட்டு மேம்பாடு காணப்பட்டது. அங்கே அண்மைக் காலத்தில் 'பாரதீயப் பண்பாட்டு விழா' என்கிற விழாவை ஏற்படுத்தி அதில் இந்துத்துவச் சாயல் கொண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தத் தொடங்கினர். 'பாரதீயம்' என்கிற வார்த்தை எத்தகைய பூர்வீகம் கொண்டது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. கடந்த 2006ஆம் ஆண்டில் இப்படிப் பட்ட ஓர் விழாவை ஏற்பாடு செய்து தமிழ்நாட்டிலிருந்து இந்துத்துவச் சிந்தனையாளர்கள் சிலரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்துப் போயிருக்கின்றனர். தமிழகத்திலிருந்து போனவர்கள் 'சமஸ்கிருத ஸ்லோகம்'லி பஜனைலிஆன்மீகப் பயிற்சி என்ற வரிசையில் ஆர்.எஸ்.எஸ்.பாணியில் விழாவை நடத்தியிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியா விலிருந்து தமிழர்கள் சிலரைக் கலாச்சாரப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்லித் திருச்சிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அங்கே அவர்கள் நடத்திய வகுப்புகளில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் தமிழர் பண்பாட்டுக்கெதிரான ஆரியத்தின் கூரிய ஆயுதங்கள் என்பதைக் கண்டு கொண்ட மலேஷியத் தமிழர்கள் வகுப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு மலேஷியா திரும்பி விட்டனர். (பெயர்களைச் சொல்வது நல்லதல்ல என்பதால் விடுகிறோம்)

இந்தியர்கள் நலனுக்காகப் போராடுவதாகக் கிளம்பியிருக்கும் இவர்கள் தங்கள் அமைப்புக்கு வைத்திருக்கும் பேர் என்ன தெரியுமா? 'ஹிண்ட்ராஃப்' என்பதுதான். (ஐண்ய்க்ன் தண்ஞ்ட்ற்ள் ஆஸ்ரீற்ண்ர்ய் எர்ழ்ஸ்ரீங்) அதாவது, 'மொழிவழி மக்களான தமிழர்களுக்கான போராட்டமெனில் 'தமிழர் கோரிக்கைக் குழு' எனப் பெயர் சூட்டியிருக்கலாம் அல்லது 'இந்தியர் நலம் நாடும் சங்கம்' எனச் சொல்லியிருக்கலாம். இடையில் 'ஹிந்து உரிமை', எங்கிருந்து வந்தது. ஓர் இஸ்லாமிய நாட்டில் இந்து மதத்தின் பெயரால் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கினால் ஓர் தேசிய அரசு அதை எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்? துபாய் போன்ற அரபு நாடுகளில் இப்படிப்பட்ட அமைப்பு ஒரு நிமிடம் உயிர் வாழ முடியுமா என்பதை எண்ணிப்பாருங்கள், தென் கிழக்கு ஆசியாவிலேயே மதத்தின் பேரால் ஆளும், மிகச் சிறந்த ஜனநாயக நாடு என மலேஷியா பேர் பெற்றிருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது பிரிட்டிஷ் தூதரகத்திடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துப் போராடு கின்றனர். தங்கள் மூதாதையர்களைத் தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் உழைப்புக் கூலிகளாக அழைத்து வந்து பிரிட்ஷ் அரசு ஏமாற்றிவிட்டது என்றும், அதற்காக ஒரு தமிழருக்கு 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மலேஷி யாவை விட்டுப்போய் அரை நூற்றாண் டாகிவிட்டது. இப்போது இப்படியொரு வினோதமான கோரிக்கை: உலக நாடுகள் இதைப் பார்த்து எள்ளி நகையாடாதா? இந்தக் கோரிக்கையோடு இங்கிலாந்து தூதரகத்திற்கு ஊர்வலம் புறப்பட்ட போதுதான் மலேஷியக் காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது. கலவரம் வெடித்தது. முன் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஓர் அரசு எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்? கடந்த தீபாவளிக்கு முதல் நாள் (2007லி அக்டோபர்), அத்துமீறிக் கட்டப்பட்ட ஒரு கோவில்லிஒரு பள்ளிவாசல் முப்பத்திரண்டு வீடுகளை அரசு அப்புறப்படுத்தியது. இதுகுறித்தும் 'ஹின்ட்ராஃப்' அமைப்பு ஆத்திரப்படுகிறது.

அன்னிய மண்ணில் வாழப் போன வர்கள் அந்த அரசின் சட்ட திட்டங்க ளுக்கு உட்பட்டே வாழ்க்கை நடத்த வேண்டும். அத்துமீறினால் அல்லல்தான். இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்கள் செய்யும் கொடுமையைப் போன்றதல்ல மலேஷிய நிலை. இப்படிப்பட்ட ஆர்ப் பாட்டமும், போர்ப்பாட்டும் தொடரு மானால் எதிர்காலத்தில் இந்தியர்கள் யாருக்கும் அங்கே விசாவோ குடியுரிமையோ கிடைக்காமல் போகலாம். இது கொள்ளிக்கட்டையால் தலையில் எடுத்துச் சொறிந்து கொள்ளும் முயற்சி.

நன்றி:லி ஜனசக்தி நாளிதழ்

டிசம்பர் 6: ஆறாத மனம்... காயாத ரணம்...

டிசம்பர் 6: ஆறாத மனம்... காயாத ரணம்...
ஜி.அத்தேஷ்



காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றிவிடும்; வடுக்கள் அதன் நினைவு களை அறிவுறுத்திக் கொண்டிருக்கும். ஒரு சமுதாயத்தின் தனித்தனி இதயங் களை உடைத்து நொறுக்க முடியாதவர் கள், இதயங்களில் வாழும் புனிதங்களை அவமதித்து மனங்களைப் புண்படுத்தி விடுகின்றனர். அப்படித்தான் நிகழ்ந்தது அந்த தேசிய சோகம்.

14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்பட்ட நிகழ்வு. 1992 டிசம்பர் 6ம் நாள் அஃது ஓர் ஞாயிற்றுக்கிழமை. மதவெறி பிடித்த ஒரு கடப்பாரை கூட்டம், இந்நாட்டின் பெரும்பான்மை சமூகம் மதிக்கும் இந்து மதத்தின் பெயரால், ராமனின் பெயரால், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது. ராமரின் பக்தனை வெறியனாக்கிய ஜனசங்கம், நீறுபூத்த நெருப்பாக, இந்திய ஜனநாயகத் தையும், மத சகிப்புத்தன்மையையும் வேர் பிடித்து வளர்ந்திருக்கிறது. ஆதிக்க சக்திகளால் எழுதப்படும் ஊடகங்களும், வாசிக்கப்படும் செய்திகளும் இந்துத்துவ வகுப்பு வெறியை கொழுந்து விட்டு எரியச் செய்தன. இவற்றின் அறுவடை யாக, சர்வதேச அளவில் முன்னுதாரண மாக நிகழ்திருக்க வேண்டிய நம் இந்திய தேசம் அவமானப்பட்டுக் கிடக்கிறது. 1992 டிசம்பர் 7ம் நாள் (மஸ்ஜித் இடிக்கப்பட்ட மறுநாள்) தொலைக்காட்சியில் அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமர் நரசிம்மராவ், ''மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டித் தரப்படும்'' என்றார். நாட்டின் தலைமை பீடமான பிரதமரின் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தனர். இளம் வயதில் ஜனசங்கம் ஊட்டிய வகுப்பு வெறி, நரசிம்மராவை இறுதிவரை மன்னிப்புக் கேட்க அனுமதிக்கவில்லை. நரசிம்மராவ் தவறிழைத்து விட்டார் என்று நேரு குடும்பம் தற்போது கூறிவருகிறது. அதே நேரம், 1949 டிசம்பர் மாதம் 22ம் தேதி, அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜித்தில் சமூக விரோதிகள் ராமன், லட்சுமணன் மற்றும் சீதையின் கற்சிலைகளை தொழுகை தலத்தில் வைத்துவிட்டு திரும்பியதில் இருந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நேரு பிரதமராக இருந்திருக் கிறார். அப்போது உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதே, யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்ட சிலைகளை யாருக்கும் தெரியாமல் வெளியே எறிந்து விட நேருவுக்கு தைரியமும், தொலை நோக்குப் பார்வையும் இருந்திருக்க வில்லை.



மஸ்ஜித்தை உடனே பூட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது எவ்வளவு அடிமுட்டாள்தனமான செயலாகும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் தேசிய அளவில் முடிவெடுக்கும் தார்மீக உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு என்று கூறிய நேருவுக்கு, சிலைகள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் யாருக்கு சொந்தமாக இருக்க முடியும் என்பதில் முடிவெடுக்கும் உரிமை எப்படி இல்லாது போனது? சர்வாதிகாரி சர்தார் வல்லபாய் பட்டேலு டன் இணைந்து குஜராத்தின் சோம்நாத் நகரில் இருந்த ஒரு பள்ளிவாசலை தகர்த்துவிட்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்பட காரணமான நேருவுக்கு, பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் மதச்சார்பற்ற முடிவெடுக்கும் மனம் இருந்திருக்க வாய்ப்பில்லை.

1949ல் பூட்டப்பட்ட பள்ளிவாசல் வளாகம் 1987ஆம் ஆண்டு ராம்நியாஸ் என்ற சிறப்பு பூசைக்காக வளாகம் திறந்து விடப்பட்ட போது தான், இப்படி ஒரு பிரச்சனை இருந்து வருவது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. பாபர் மஸ்ஜித் நிர்வாகத்திற்கும், அதை கோயில் என்று வாதாடும் ஒரு கூட்டத்திற்கும் இடையே மட்டும் இருந்து வந்த வழக்கு தேசிய இனங்களின் தன்மானப் பிரச்சனையாக்கப் பட்டது. 1987ல் ஷாபானு தொடர்பான ஜீவனாம்ச பிரச்சினையில்லிபிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத்தின் ஓட்டெடுப்பு மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முறியடித்தார். அதற்கு பரிகாரமாக இந்துத்துவ கும்பலின் நீண்டநாள் கோரிக்கையான பாபரி மஸ்ஜித் பிரச்சினைக்கு ராஜீவ் காந்தி வழிவிட்டார். இதிலிருந்துதான் இந்திய ஒற்றமையை சீர்குலைக்கும் சில்மிஷ வேலைகள் ஆரம்பமாயின. 1987க்குப் பிறகே 1992 டிசம்பர் 6ல் பூஜைகள் செய்வதற்காக அத்வானி தலைமையிலான மதவெறிக் கூட்டம், பாபர் மஸ்ஜித் வளாகம் சென்றது. மஸ்ஜித் இடிக்கப்பட மாட்டாது என்று அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு வாக்குறுதி அளித்தனர். மஸ்ஜித் பாதுகாக்கப்படும் என மத்திய அரசும் உறுதி கூறியது. பாதுகாப்புக்காக(?) சில மைல் தொலைவு களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ராணுவம், ராம பக்தர்களாக மாறி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கோயிலை நோக்கி கையெடுத்து கும்பிட்டு நின்றது. இடிக்கப் பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டப்படும் என்பதே முன்னாள் பிரதமரின் வாக்குறுதி, மற்றும் முஸ்லிம்களின் கோரிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக 1947க்குப் பிறகு, எந்தெந்த இடத்தில் எந்தெந்த சமயத்தின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றனவோ அவை அவ்வாறே பாதுகாக்கப்படும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அந்தச் சட்டம் பாபர் மஸ்ஜிதையும் உள்ளடக்குகிறது.



இதற்காகத்தான் முஸ்லிம் சமூகம் 14 ஆண்டுகளாக விடாமல் போராடி வருகின்றது. எனவே இடித்த இடத்தில் மஸ்ஜித் மீண்டும் கட்டப்படுவதும், அமைப்புச் சட்டத்தின் உறுதிமொழியை நிறைவேற்றுவதும் அரசுக்கும், நீதித்துறைக்கும் கடமையாக இருக்கும் போது, அந்த அமைவிடம் யாருக்குச் சொந்தம் என்ற விவாதம் அர்த்தமற்ற தாகும். ஓர் உதாரணத்திற்கு, இடம் த.ந.ந.க்கு சொந்தம் என்று தீர்ப்பானால், இடித்த இடத்தில் அளித்த வாக்குறுதிப்படி பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்டி அதன் நிர்வாகம் பொறுப்பை நரேந்திர மோடியிடமா கொடுப்பது? என்ன பிதற்றலான வாதம். ஆனால் அறிவு ரீதியான வாதங்களை புறந்தள்ளி விட்டு, பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் முன்னர் ராமர் கோயில் இருந்ததா? அங்கே ராமர் பிறந்து, வாழ்ந்து, ஆட்சி செய்தாரா? என்றும் ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும் படி தொல்லியல் துறை பணிக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய வேடிக்கை.

புராண கணக்கீட்டின் படி ஒரு யுகத்திற்கு 5 லட்சம் வருடங்கள், முதல் யுகமான திரேதா யுகத்தில் ராமர் பிறந்தார் என்பது இந்துத்துவாக்களின் நம்பிக்கை. அரசியலமைப்பு சட்டத்தால் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்ட பெரும்பான்மை இந்திய சமுதாயத்திற்கு இந்த கணக்கு எல்லாம் தெரியாது. அப்படியானால் 4 யுகங்களில் முதல் யுகமான திரேதா யுகத்தின் இன்றைய ஆயுள் கிட்டத்தட்ட 20 இலட்சம் வருடங்களுக்கு முந்தியது. கற்காலத்திற்கும் முற்பட்டதாக கருதப்படும் இதிகாச மனிதர்களின் தடம் பற்றி தகவல் அறிய தொல்லியல் துறை சம்மதித்து இருப்பது தேசிய நகைச்சுவை. ஒரு வேளை இந்துத்துவ சக்திகள் சில தகிடு தத்தங்களின் வழியே தங்களுக்குத் தோதான ஒரு தீர்ப்பினை உச்சநீதி மன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டால், அதன் வழியே, ராமர் அங்குதான் பிறந்தார் என்றோ, அல்லது கோயில் இடிக்கப்பட்டது என்றோ முடிவுகள் வெளியாகுமானால், பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் வழக்கு என்ன வாகும்? அதற்காக சட்டத்தால் யாரையும் தண்டிக்க முடியாதே. மஸ்ஜித் இடிக்கப் பட்ட இடத்தில் கோயில் கட்டுவது சரி என்றால் மஸ்ஜித் இடித்தவர்களை தண்டிப்பது நியாயமாகாது. இடித்தவர் களை தண்டிப்பது சரி என்றால் கோயில் கட்டுவது நியாயமாகாது. அரசும், நீதித் துறையும் என்ன செய்யப் போகின்றன?



மஸ்ஜித் இடிக்கப்பட்ட அன்று, உமா பாரதியும், முரளிமனோகர் ஜோஷியும் கட்டித் தழுவி மகிழ்ச்சி வெளிப்படுத்திய காட்சி ஊடகங்களிலே உலா வந்தது. மாநிலம்தோறும் ர(த்)தம் ஓட்டி கூட்டம் திரட்டிச் சென்றவர் அத்வானி. இவர்கள் எல்லாம் தண்டனையில் இருந்து தப்பி இன்றுவரை சுதந்திரமாக உலாவருகிறார் கள். மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் பின்னணி யில் கிடைத்த அரசியல் வளர்ச்சியைக் கொண்டே பிரதமர்களாகவும், மாநில முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி சுகம் கண்டார்கள்.

14 ஆண்டுகள் ஆகியும் வெளிவரத் தயங்கும் இவர்கள் மீதான தீர்ப்பு, வெளிவரும் தினத்தில், இவர்கள் ஆண்டு அனுபவித்து நீதியின் தண்டனைக்கு தப்பியவர்களாக மரணித்திருக்கலாம். நீதிமன்றம் தீர்ப்புகளை வாசிக்கும் போது, அதனை கேட்பதற்குக் கூட குற்றவாளி கள் பூமியில் உயிருடன் இருக்க மாட்டார்கள்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கும் அங்கு ராமர் கோயில் இருந்தது என்ற வாதத்திற்கான வழக்கும் சேர்த்து விசாரித்து வரும் லிபரான் கமிஷனின் முடிவுகள் இன்னும் சில மாதங்களில் வெளி வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தீர்ப்புகளின் மீது நெருப்புகளை பற்ற வைக்கும் சதித்திட்டங்களை மோடிகளும், கேடிகளும் உருவாக்கு வார்கள். ராமர் கோயில் பிரச்சனையில் வெளிவர இருக்கும் தீர்ப்புகளை மிரட்டும் ஒரு முன்னோட்டமாகத்தான் ராமர் பாலம் தொடர்பான சர்ச்சையை நீதிமன்றம் மூலம் பிரச்சனையாக்கினார்கள்.

நாம் எதிர்பார்ப்பது வெறும் தீர்ப்பு களை மட்டுமல்ல, பிரச்சனைக்கான தீர்வுகள். பாபர் மஸ்ஜித் வளாகம் முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்ற உரிமைப் பூர்வமான தீர்வும், இடித்த இடத்தில் மீண்டும் பழம் பெருமையுடன் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும் என்ற தீர்ப்பும், அவ்வாறு தீர்ப்பளிக்கும் தைரியமும், நியாய உணர்ச்சியும் நீதிபதிகளுக்கு அவசியப்படுகிறது.

இந்திய ஜனநாயகத் தின் அதிகபட்ச அதிகாரம் நாடாளு மன்றத்துக்கே உரியது என்றாலும், அரசியல் வாதிகள் எப்போதும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு தூரமாகவே இருந்து வருகின்றனர். அதனால் அறிவுஜீவிகள் தொடங்கி சாமானிய மக்கள் வரை அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கும் அமைப்பு நீதிமன்றம் தான். அந்த நம்பிக்கையின் உச்சபட்சம் உச்ச நீதிமன்றத்தின் மீது இருக்கிறது. ஆனால், நீதிமன்றங்களின் செயல்பாடுகளிலும், கூட பாரபட்சங் களும், சமயச்சார்பும் காணப்படுகின்றன. உச்சநீதிமன்றமா? உச்சி குடுமி மன்றமா? என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அதன் நடவடிக்கைகள் பாரதூரமாக அமைந்திருக்கின்றன.

பாபர் மஸ்ஜித் பூட்டப்பட்டு 58 ஆண்டுகள் ஆகியும் அதன் மீதான நியாயத்தை நீதிமன்றங்களால் வெளிப் படுத்த முடியவில்லை. அதேநேரம், இந்துத்துவ சக்திகளுக்கு ஓர் ஆபத்து ஏற்படும் என்றால் விடுமுறை நாட்களிலும் கூட நீதியின் கதவுகள் திறந்து கொள்கின்றன. கொலைக்குற்றமும், காமவெறிக்குற்றமும் சுமத்தப்பட்டு காஞ்சி காமகோடி ஜெயேந்திரர் கைது செய்யப்படுகிறார். நீதிமன்றங்களின் விடுமுறை நாளான அன்று சிறப்புச் சலுகையாக நீதிமன்றம் திறக்கப்பட்டு ஜாமின் வழங்கப்படுகிறது. அதுவே, எந்தக் குற்றம் செய்யாதவர் என்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையான அப்துந் நாசர் மதானிக்கு மூன்று முறை உச்சநீதிமன்றமே ஜாமின் மனுவை நிராகரித்துள்ளது, சிறுபான்மையினரை சில சமூக விரோதிகளும், அரசியல் விரோதிகளும், தேசிய மதச்சார்பின்மை யின் எதிரிகளும்தான் இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறார்கள் என்றால், சில நேரங்களில் நீதிமன்றங்களும் அந்தப் புள்ளியை நோக்கி நகர்த்தப்படுகின்றன.

நீதிமன்றங்களிலே இருக்கும் கறுப்பு ஆடுகளுக்கும், வெளியே திரியும் வகுப்பு வெறி சக்திகளுக்கும் இடையே கண்ணுக்கு புலப்படாததோர் மெல்லிய இழை இரு முனைகளையும் இணைத்துக் கொண்டிருப்பதை மனித நேயர்கள் சுட்டிக் காட்டவும் தவறுவதில்லை. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் வடிகட்டிய மீதமாக நீதிமன்றங்களே இருப்பதால் இந்த ஆண்டின் டிசம்பர் 6ஆம் தினத்தில், நீதிமன்றங்களின் கவனத்தையும், சட்டக் காப்பாளர்களின் நடவடிக்கையையும் துரிதப்படுத்தும் வண்ணம், நீதிமன்றங்களின் முன் போராட்டம் நடத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவு செய்திருக் கிறது.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் ஆத்திரத்தில் எழுந்த அறிவு மயக்கத்தால், நாடெங்கும் வீசியெறிப்பட்ட வன்மு றைக்கு ஏதும் அறியாத அப்பாவி மக்கள் பலியாகி வந்தனர். ஒவ்வொரு குண்டு வெடிப்பு ஒலங்களின் இரைச்சலால் முஸ்லிம் வீடுகளின் இரவுகள் அச்சத் துடன் விழித்திருந்தன. கைதுகளும், வழக்குகளும், அவமானங்களும், வழமை யாயின.
அதுவே, குஜராத்தின் கோர படுகொலைகளை நியாயப்படுத்தவும் காரணமாயின. தமிழ்நாட்டு இளைய சமுதாயமும் மதவாத சக்திகளின் சதிகளுக்கு பலியாகிப் போகாமல் தடுக்க, த.மு.மு.க. சாத்வீகமான, அமைதி வழிப் போராட்டங்களை கையிலெடுத்தது. ஆரம்பக் கட்டத்தில் அதன் மீது விழுந்த சந்தேகப்பார்வைகளையும், எதிர்ப்புகளையும், பழிச் சொற்களையும் தன் மீதே சுமந்து, சமூகத்தின், இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம், பாதுகாவல், குடும்பங்களில் நிலவவேண்டிய சாந்தி சமாதானத்திற்காக பல்வேறு தியாகங் களைச் செய்து பல வெற்றிகளை இறையருளால் பெற்றிருக்கிறது.

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில், தேசிய அளவில் முஸ்லிம்களை ஒருமுகப்படுத்தி போராடவும் தமுமுக திட்டங்களை வகுத்து வருகிறது.

பாபர் மஸ்ஜித் மீதான உரிமை மீட்புக்காக தொடர்ந்து தன் முனைப்பான போராட்டங்களை வருடம் தவறாமல் நடத்தி, உறங்குபவர்களையும் தட்டி எழுப்பி, எதிரிகளை எச்சரித்து வருகிறது. அதன் போராட்டப் பயணத்தில் நீதிமன்றங்களுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்க மைல்கல்.