Thursday, May 14, 2009

திராவிடக் கட்சிகளைப் புறக்கணிக்கும் சிறுபான்மை மக்கள்


பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் உச்ச வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் பல்வேறு சமுதாய அமைப்புகளின் ஆதரவைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றன. காலம் காலமாக திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய வோட்டு வங்கிகளான முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாய ஓட்டுக்கள் இந்த தடவை திராவிடக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.விற்கு கிடைப்பது சந்தேகமே. ஓட்டுக்களை மட்டுமே போட வேண்டும், அரசியல் அதிகாரம் பெற முயற்சிக்கக் கூடாது என்கின்ற திராவிடக் கட்சிகளின் நயவஞ்சகத்தனத்தை முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டார்கள். அதனால்தான் தமிழக முஸ்லிம்களின் பேராதரவு பெற்ற தமுமுகவின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள்.
காலம் காலமாக திராவிடக் கட்சிகளுக்கு, குறிப்பாக திமுகவுக்குத்தான் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பேராதரவு இருந்து வந்தது. மதமாற்ற தடைச் சட்டம், பாசிச சங்பரிவாரத்துடன் உறவு என அதிமுக தலைவி ஜெயலலிதா வின் தவறான போக்கினால் சிறுபான்மை மக்களின் ஆதரவு பெரும்பான்மையாக அதிமுகவுக்கு எப்போதுமே இருந்ததில்லை. இதனால் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை தனிப்பெரும் உரிமையோடு பெற்று அதிகாரத்தை அனுபவித்து வந்தது திமுக.
அதிகாரத்தை அனுபவிப்பது மட்டுமே தனது கொள்கையாக, பதவியைப் பெறு வது மட்டுமே தனது பிறவிப் பயனாக திமுக கருதி வந்தது. சிறுபான்மையினரின் கோரிக்கைகள் எல்லாம் பெரும் பெரும் போராட்டங்களுக்குப் பின்னால் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்தது திமுக, அதற்கு பிரதி பலனாக கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் கடுமையாக உழைத்து திமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் வெற்றியை பெற்றுத் தந்தது தமுமுக. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் தனி இடஒதுக்கீடு கோரிக் கையை கிடப்பில் போட்டது திமுக.
பல்வேறு போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகளுக்குப் பின்னால் காஞ்சி மாவட்டம் தாம்பரத்தில் நடந்த இடஒதுக்கீடு மாநாட்டில், கொட்டும் மழையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், இடஒதுக்கீடு தராவிட்டால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என இறுதி எச்சரிக்கையை விடுத்ததால் மட்டுமே கருணாநிதி இடஒதுக்கீட்டை வழங்க சம்மதித்தார்.
இது வரலாற்று உண்மை. ஆனால் எவ்வித பெரிய அளவு போராட்டங் களும் இல்லாமல் அருந்ததி இன மக்கள் உள்ஒதுக்கீடு பெற்றதையும் நாம் நினைவு கூற வேண்டியிருக்கிறது.
இதுதான் கருணாநிதியின் துரோக வரலாறு. சிறுபான்மை மக்களை ஓட்டு போடும் இயந்திரங்களாகத்தான் கருதி வந்தார் கருணாநிதி. அதனால்தான் அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டி தமுமுகவின் அரசியல் பிரிவாக சிறுபான்மை மக்களின் ஆதரவோடு மனிதநேய மக்கள் கட்சி உருவானது. அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மனிதநேய மக்கள் கட்சி ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளைக் கேட்பதும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதும் தாங்கள் ஆண்டாண்டு காலமாக அனுப வித்து வந்த பதவி சுகத்துக்கு ஆபத்து என்பதால்தான் ம.ம.க.வுக்கு சீட்டு இல்லை என்று ஒதுக்கித் தள்ளினார்.
ஆனால், மனிதநேய மக்கள் கட்சியை ஒதுக்கியது சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த ஓட்டுக்களை ஒதுக்கித் தள்ளியதற்கு ஒப்பானது என்று இப்போது உணர்ந்து வருகிறார். ஆனால் காலம் கடந்துவிட்டது. முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயங்களின் லட்டர்பேடு அமைப்புகளையும், தேர்தல் நேரத்து காளான் தலைவர்களையும் பக்கத்தில் இருத்தி படம் காண்பித்தாலும் சிறுபான்மை மக்கள் அதை நம்பத் தயாரில்லை.
மனிதநேய மக்கள் கட்சி பாராளு மன்றத் தேர்தல் மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. ம.ம.க.வின் கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் தென்காசியில் போட்டியிடுகிறது. ம.ம.க.வின் அனைத்து வேட்பாளர்களுக் கும் முஸ்லிம்களின் சமூக அமைப்புகள், ஜமாத்துகள், முக்கியப் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுபோல கிறித்தவ மக்களின் கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம் மற்றும் சமூக அமைப்புகள், பாதிரிமார்கள், சர்ச்சுகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு தங்கள் பேராதரவைத் தந்துள்ளன. மேலும் தலித் அமைப்புகளும் ம.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ம.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் திமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ம.ம.க. போட்டியிடாத மற்ற இடங்களிலும் திமுக, அதிமுகவுக்கு எதிரான அலையே உருவாகி வருகிறது என கள நிலவரம் கூறுகிறது.
ஆண்டாண்டு காலம் சிறுபான்மை மக்களை ஏமாற்றி வந்த திமுகவுக்கும், எப்போதுமே சிறுபான்மை மக்களைக் கண்டுகொள்ளாத அதிமுகவுக்கும் சிறுபான்மை மக்கள் இந்தத் தேர்தலில் பாடம் புகட்ட தயாராகி விட்டார்கள் என்பதை வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

Monday, January 14, 2008

புத்தாண்டின் பெயரால்...

கடந்த சில ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, புத்தாண்டு கொண்டாட் டங்கள் நகரங்களின் வீதிகளை நசுக்கித் தள்ளு கின்றன. பெருந்திரளான ஜனத்திரள் சாலை களில் நிரம்பி நின்று பேய்பிடித்தவர்களைப் போன்று, புத்தி மழுங்கி கத்தி, கதறி, ஓலமிட்டு, ஒரு புதிய ஆண்டை வரவேற்கும் அவலம் தொடர்கிறது.
ஆண்டின் தொடக்கத்திலேயே, இளைஞர் களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று கருதும் அளவுக்கு உற்சாகம் கட்டுப்பாடு இழக்கிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்கள் அன்றைய தினம் கலாச்சார சீரழிவின் விளிம்பு நிலைக்கு வந்து விடுகின்றன.. ஊடகங்கள் வர்த்தக நோக்கில் புத்தாண்டு தினத்தை ஒரு சர்வசமய பண்டிகை போல் வர்ணிக்கின்றன.

நட்சத்திர விடுதிகள் விழா ஏற்பாடுகள் செய்து தருகின்றன. சுமார் 1200 முதல் 10,000 ரூபாய் வரை அனுமதிக்காக, விடுதிகளின் தர அடிப்படையில் ஒரு நபருக்கென்று வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் கணினி தொடர்பான பணியிலிருப்பவர்களுக்கு இந்த தொகை என்பது அவர்களுடைய ஒரு நாள் வருமானமே அதை ஆண்டுக்கு ஒருமுறை செலவிடுவதில் சுமை இல்லை. இதனால் 'ராத்திரி கூத்தடிக்கும் இந்த கொண்டாட்ட கும்மாளம் படு ஜோராக நடக்கிறது.

உற்சாக மிகுதியாலும், வெறியாட்டத்தினாலும், அத்து மீறல்கள் நடக்கிறது. குறிப்பாக, பெண்கள் மீது பாலியல் வன்முறை மிகச் சாதாரணமானவை, பலர் வெளியில் கூறுவ தில்லை. சில நேரங்களில் செய்தியாகிறது. இந்த ஆண்டு மும்பை நட்சத்திர விடுதியில் நடந்த அட்டூழியம் பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளியானது. இரண்டு பெண்கள் மீது வெறி கொண்ட இளைஞர் கும்பல்; ஆளுமை செய்தது கும்பலில் 80 பேர் இருந்தனர் என்கிறார்கள்.. நிலைகுலைந்த பெண்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களை அழைத்து வந்திருந்த இளைஞர்கள் செய்வதறியாது உணர்ச்சி இழந்தனர்.

இனிமேல் அவர்கள் இத்தகைய கழிப்பிடங்களை திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதுமானது. சென்னையில், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா என்ற நட்சத்திர விடுதியில் நீச்சல் குளத்துக்கு மேலே கட்டப்பட்ட மேடை சரிந்ததில், பொறியியல் துறை இளைஞர் ஒருவர் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம், ஒரு மரணத்தை ஏற்படுத்திச் சென்றதை அடுத்தே அரசு நடவடிக்கை தொடங்குகிறது. விடுதியின் மேலாளர் கைது செய்யப்படுகிறார். நீச்சல் குளத்தின் மீது ஆண்டுதோறும் மேடை அமைக்கப்படுவது பழமையாம்.

விடுதியில் விழாக்கோலம் காண்கிறபோதே, காவல்துறை, முறையான கண்காணிப்பை செலுத்தியிருக்க வேண்டும். குற்ற முகாம்களில் இருந்தே, காவல்துறைக்கு லட்சங்களில் லஞ்சம் தரப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள், இதுபோன்ற நிகழ்வுகளால் உண்மைப்படுத்தப் படுகிறது. விடுதிகளில் நிர்வாண நடனங்கள் நடத்தக்கூடாது என்று உத்தரவிடும் காவல் துறை, அந்த உத்தரவுகள் செயல்படுத்தப் படுகிறதா என்ற கண்காணிப்பைத் தொடர்வ தில்லை.

பிழைப்பதற்காக விபச்சாரம் நடத்தும் கீழ்தட்டு மக்களைத் தேடிப்பிடித்து சிறையிலடைக்கும் காவல்துறை செல்வந்த வீட்டு செல்வங்கள் செய்யும் சில்மிஷங்களை கண்டு கொள்வதில்லை. 'மாடி வீட்டு' கலாச்சாரச் சீர்கேடுகளை, அவர்களது வாழ்க்கைத் தரம், அவர்களது படிப்பு மற்றும் தொழில் முனைவின் வழியே ஈட்டும் வருவாய் பயன் காரணமாக நடவடிக்கைகள் கமுக்கமாக தவிர்க்கப்படு கின்றன.

இனி வருங்காலங்களிலாவது புத்தாண்டின் பெயராலும் இதர பண்டிகைகளின் பெயராலும் நடைபெறும் காமக்களியாட்டங்களும், கலாச் சாரச் சீர்கேடுகளும் தடுக்கப்பட அரசும், காவல்துறையும் உரிய கவனம் செலுத்த வேண்டும். சமூக அமைப்புகள் இதுகுறித்த பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி நமது மண்ணின் பாரம்பரிய நாகரீகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

G.ATHESH

அமெரிக்கா, மனித குலத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் மலேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர்






அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக அமைதிக்கும், மனித குலத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கி வருவதாக மலேசிய உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவருமான முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம்கள் மற்றும் மூன்றாம் உலகநாடுகளிடையே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தாக்கம் என்ற தலைப்பில் முஹைதீன் சொற்பொழிவாற்றினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சென்னை ஹோட்டல் பிரசிடெண்டில் 29,12,2007 அன்று வழக்குரைஞர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் ஏற்பாடு செய்திருந்தது, இந்த கூட்டத்தில் முஹைதீன் பேசும்போது, அமெரிக்கா உலகையே ஆதிக்கம் செலுத்துவதாகவும், ஒவ்வொரு துறையிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதாகவும், அதை நோக்கமாகக் கொண்டே தனது வெளியுறவுக் கொள்கையை நிறுவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களையும் உதாசீனம் செய்து, அடுக்கடுக்காய் பொய் கூறி ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் போரின் மூலம் ஆக்கிரமிப்பு செய்து இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான, போர் என்னும் பெயரால் ஈரானையும் சிரியாவையும் குறிவைக்கிறது.

கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளை இன்று சோமாலியா மக்களும் பாலஸ்தீன மக்களும் அனுபவித்து வருகிறார்கள் எனில் அதற்கு அமெரிக்காவின் நேரடியான, மற்றும் மறைமுகமாக மக்கள் விரோதக் கொள்கைகளும் மற்றும் அந்நாடுகள் மீதான அமெரிக்கா நிர்பந்தப்படுத்திய பொருளாதாரக் கொள்கையுமே காரணம் ஆகும் என்றும் காதர் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்தை பிளவுபடுத்தி, அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தினை அபகரித்து உலகம் முழுவதையும் பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் செல்வாக்கு பெற விரும்புகிறது என்றும் நடுநிலையான மக்கள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

என்னைக் கொன்று விடுவார்கள் தெஹல்கா செய்தியாளர் திடுக்கிடும் தகவல்


என்னைக் கொன்று விடுவார்கள் தெஹல்கா செய்தியாளர் திடுக்கிடும் தகவல்



இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையாளர்களின் நேரடி வாக்கு மூலங்களை உலக அரங்கில் அம்பலப்படுத்திய தெஹல்கா செய்தியாளர் ஆசிஸ்கேதானுக்கு சங் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இத்தகவலை ஆசிஸ் கெதான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். படுகொலைகளையும் பாலியல் வக்கிரங்களையும் இழைத்தவர்களும், சராசரி குஜராத்திகளும் கூட நடந்த பாதகச் செயல் குறித்து வெட்கப்படுவதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு குஜராத்தியின் மனதிலும் விஷம் நிறைந்திருக்கிறது என்று வேதனை தெரிவித்த ஆசிஸ் கேதான் தன்னை கொலை செய்ய இரண்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சுற்றி வளைத்தது. நான் இரண்டு வாகனங்களில் உள்ளவர்களையும் நேரடியாகப் பார்த்தேன் நுண்ணிய காமெராக்களால் நான் படம் பிடித்து வேன் என எண்ணியதாலோ எண்ணவோ அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.

நான் என கடமையைச் செய்தேன் அது சிலருக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. அந்த சமூக விரோதிகள் தொலைபேசி வழியாகவும் ஈலிமெயில் மூலமாகவும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். கொலையாளிகளின் பட்டியலில் என்பெயர் உள்ளது. நான் கொல்லப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது என மனம் வெதும்பி A.F.P என்ற வெளி நாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஆசிஷ் கேதான்

Wednesday, December 12, 2007

என்னதான் நடக்கிறது மலேசியாவில்...?

என்னதான் நடக்கிறது மலேசியாவில்...?
திரு. வீரபாண்டியன் (சன் டி.வி அரசியல் விமர்சகர்)
சிங்கப்பூர் வானொலி முன்னாள் தயாரிப்பாளர்)



இந்தியாவைப் போலவே மலேஷி யாவும் பிரிட்டிஷ் காலனி நாடாயிருந்தது. பின்னர் 1957 ஆகஸ்டில் விடுதலை பெற்றது. மலாயாவுக்கு (மலேஷியாவின் பழைய பெயர்) விடுதலை கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும் போது, ஆங்கிலேயர்கள் ஒரு முக்கிய மான நிபந்தனையை விதித்தனர். 'உழைப்புக் கூலிகளாக இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் கொண்டு வரப்பட்டு மலாயா மண்ணையே தங்கள் வாழ்விடமாக ஏற்று வாழ்ந்து வரும் இந்திய, சீன வம்சா வழி மக்களுக்கும் பூர்வீக மலாய் மக்களைப் போல குடியுரிமை வழங்க வேண்டும்' என்பது தான் அந்த நிபந்தனை. மலாயாவின் அன்றைய தேசியத் தலைவர்கள் இதனை மனமுவந்து ஒப்புக் கொண்டனர். அதன்படி சுதந்திரத்துக்கு முன்னர் யார், யாரெல்லாம் மலாயாவில் வாழ்ந்து வந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் இனப் பாகுபாடின்றி குடியுரிமை வழங்கப்பட்டது.

பிரிட்டீஷ் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் தொழிலா ளர்கள் ஏராளமான உரிமைகளையும் வாழ்க்கை வசதிகளையும், மேம்பாடு களையும் அடைந்து மேன்மையோடு வாழத் தலைப்பட்டனர். அந்த நாட்டின் பூர்வீகத் தாய்மொழியான மலாய் மொழி தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறவியிலேயே மொழி வல்லமை மிக்குடையவர்களான தமிழர்கள் (இர்ழ்ய் கண்ய்ஞ்ன்ண்ள்ற்ள்) மலாய் மொழியைக் கற்றுத் தேர்ந்து பூர்வீகக் குடிகளோடு இரண்டறக் கலந்தனர். பள்ளிகளில் சீனமொழியும், தமிழும் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப் பட்டது. சிறுபான்மைச் சமுதாயமான மலாய் அல்லாதார் தங்கள் மொழியை ஒரு பாடமாகப் பயில அனுமதிக்கப் பட்டனர். தமிழ் வானொலியும், தொலைக் காட்சியும் இருபத்து நான்கு மணிநேரமும் இன்னிசை முழங்கி இன்பத்தில் ஆழ்த்துகின்றன. திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் கொடிகட்டிப் பறக் கின்றன. தமிழ்நாட்டுக் கலைஞர்களும், பேச்சாளர்களும் அடிக்கடி அங்கே சென்று பைந்தமிழ் முழங்கிப் பரவசப் படுத்தி விருந்துண்டு வெற்றியோடு திரும்புகின்றனர்.

இந்தியத் தமிழர்கள் ஏராளமானோர் இப்போது மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாவும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அந்த நாட்டின் மிகச் சிறந்த கல்விமான்களில் பலர் தமிழர்கள் என்பது உலகறிந்து உண்மை. நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வார்த்தையில் சொல்வதாயிருந்தால் 'தாய் நாட்டுத் தமிழனை விட மலேஷியத் தமிழன் மகிழ்ச்சியாயிருக்கிறான்'. அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 3. தமிழ் வார இதழ்கள் ஆறும், மாத இதழ்கள் ஏழும் வெளிவருகின்றன. மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் மட்டும் 14க்கும் மேற்பட்ட திரையரங்கு களில் தமிழ்ப்படங்கள் திரையிடப்படு கின்றன. நாடு முழுவதும் ஏறத்தாழ 30 அரங்குகளில் தமிழ்ப்படங்கள் வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

மலேஷியத் தமிழர்களின் நலனுக் காகவே தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் மலேஷிய இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா) இதன் புகழ் பூத்த தலைவரா யிருக்கும் டத்தோ ஸ்ரீ சாமிவேலு, அந்த நாட்டின் கேபினட் மந்திரியாயிருக்கிறார். இவரோடு திரு. பழனிவேலு போன்ற மேலும் மூன்று பேர் துணை அமைச்சர்களாயிருக்கின்றனர். இவர்களை அல்லாமல் 3 பேர் நாடாளு மன்ற உறுப்பினர்களாகயிருக்கின்றனர். சிற்றூர்களிலும், நகராட்சிகளிலும் பல முக்கியமான பொறுப்புகளைத் தமிழர்கள் வகிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த நாட்டின் தலைமை நீதிபதியாகவே 'அஜித் சிங்' என்னும் இந்தியர் பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும் பலர் நீதிபதிகளாக இப்போதும் பணியாற்று கின்றனர். நாடாளுமன்ற செயலர்களாக (ல்ஹழ்ப்ண்ம்ங்ய்ற்ஹழ்ஹ் நங்ஸ்ரீங்ற்ஹழ்ண்ங்ள்) நம்மவர்கள் பலர் சிறப்பாகச் செயலாற்றுகின்றனர்.

1965ஆம் ஆண்டு வரை ஒரு மாநில மாயிருந்த சிங்கப்பூர், தனி நாடாகப் பிரிந்து சென்றது. அது முதல் உலக வரைபடத்தில் சிங்கப்பூர் குபேரபுரியாகக் கோலோச்சத் தொடங்கியதைக் கூறத் தேவையில்லை. சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகார மொழியாக அங்கீகரிக்கப் பட்டது. நாணயத்தில் தமிழ் பொறிக்கப் பட்டது. சீனர்களுக்கு மட்டுமல்ல: எல்லா இன மக்களுக்கும் பொதுவான நாடு' என்று சிங்கப்பூர் பிரதமர் சொல்லி மகிழ்ந்தார். ஆனால், மலேசியா தனது மலாய் மொழியையே ஆட்சி மொழி யாக்கி அழகு பார்த்தது. அந்த மொழியைக் கற்றவர்கள் மட்டுமே அதிகாரத்துக்கும், அரசுப் பதவிகளுக்கும் வர முடியும் என்ற நிலை வந்தது.

மலேஷியாவின், மண்ணின் மைந்தர் கள் (பூமி புத்ரா) எனப் பூர்வீகக் குடிமக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அவர்கள்,
1. பரம்பரை, பரம்பரையாக மலேஷியா வில் வாழ்வோராயிருக்க வேண்டும்.
2. மலாய் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்க வேண்டும்.
3. இஸ்லாத்தைச் சேர்ந்தவர்களா யிருக்க வேண்டும்.
இந்த விதிகளுக்குள் வருவோர் மட்டுமே, 'பூமி புத்ரா' என அழைக்கப் படுவர். இந்த விதிகளை வகுத்ததோடு மட்டுமின்றி, மலேஷிய அரசாங்கம், தங்களுடைய நாட்டை ஓர் இஸ்லாமிய நாடு (பட்ங்ர்ஸ்ரீழ்ஹற்ண்ஸ்ரீ ஸ்ரீர்ன்ய்ற்ழ்ஹ்) எனப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்ட பூர்வமான மத வழிப்பட்ட இஸ்லாமிய நாட்டில் அரசாங்கத்தின் மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே முன்னுரிமை பெறுவது உலகெங்கும் நடைமுறையில் உள்ளதுதான்.

நிலைமை இவ்வாறிருந்தும், பூர்வீகக் குடிமக்களான மலாய் மக்கள் மத்தியில் மன நிறைவு இல்லாமலிருந்தது. அதற்குக் காரணம் அந்தச் சமூக மக்கள் பெரும் பாலும் கடற்கரை ஓரங்களில் மீன்பிடித் தொழிலைச் செய்து படிப்பும், முன்னேற்ற முமில்லாமல் வாழ்ந்ததுதான். இயற்கையி லேயே ஊக்கம் மிகுந்த சமூகமான சீனர்களும் இந்தியர்களும் வர்த்தகத் திலும், வேலை வாய்ப்பிலும் மிக முன்னணிக்கு வரத் தொடங்கினர். பொதுத் தேர்தல்களில் நகர்ப் புறங்களில் சீனர்களே வெற்றி பெற்றனர். இவற்றைக் கண்ட மலாய் சமூகத்தினரை தங்கள் எதிர்காலம் பற்றிய அச்சம் ஆட் கொண்டது. கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வேண்டுமெனப் போராடினர்.

1969 ஆம் ஆண்டு மே 13 அன்று மலேசியாவில் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. பெரும்பான்மை மலாய் மக்களுக்கும், சீனர்களுக்கும் ரத்தவெறி கொண்ட யுத்தம் நடந்தது. தெரு வெல்லாம் பிணங்கள் விழுந்தன. இறுதியில் அரசாங்கம் மலாய் மக்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 30 விழுக்காடு இட ஒதுக் கீட்டைச் செய்தது. 26 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் எட்டு விழுக்காட்டினராயிருக்கும் இந்தியர் களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் ஒதுக்கியது மலேசிய அரசு. கலவரம் நடந்த அந்த நாளை இன்று வரை மலேசிய வரலாற்றில் 'கறுப்பு நாள்' என்று அழைக்கின்றனர்.

போராட்ட உணர்ச்சியோடு போர்க் கோலம் பூண்ட பூர்வீகக் குடிமக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்த மலேசிய அரசு, இந்திய சீன சிறுபான்மை மக்களுக்கும் நியாயம் வழங்கித்தானிருக்கிறது. இலங்கையைப் போலவோ, ஏனைய உலக நாடுகளில் தமிழர்களுக்கு நிகழ்ந்ததைப் போலவோ 'இன ஒதுக்கல்' எதுவும் அங்கே நடைபெறவில்லை. திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற நமது தமிழர்கள் இன்று வரை இங்கே வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். சம்பாதிக்கிற செல்வத்தைக் கொண்டு வந்துலிதமிழ்நாட்டில்தான் சொத்துகளை வாங்குகின்றனர். கூத்தாநல்லூர், கடைய நல்லூர், தோப்புத்துறை போன்ற வட்டாரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தமிழ் மண்ணுக்கு ஏராளமான வருவாயை ஈட்டிக் கொடுக்கின்றனர். அந்த நாட்டில் சம்பாதிப்பதை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்கிற எந்த நிபந்தனையும் மலேசிய அரசு விதிப்பதில்லை என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இதுதான் மலேஷியாவின் பூர்வ கதை. இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இனி நாம் சற்று ஆழமாய்ப் பார்ப்போம்.

மலேஷியாவின் பிரதானமான தொழிலாய் இருந்த ரப்பர் தோட்டங்கள் லாபகரமாய் இல்லாததால், அவை இப்போது செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன. பல தனியார் தோட்டங்கள் அரசுடைமையாக்கப் படுகின்றன. அவ்வாறு அரசுடைமையாக் கப்படும்போது அங்கே குடியிருப்பு வசதிகளை அரசே செய்து கொடுக்கிறது. அந்த இடத்தில் இருந்த கோவில்களோ, பள்ளிவாசல்களோ அகற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. புதிய குடியிருப்புகளில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைத் தொழிலாளர்கள் அமைத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தி யது. பத்து கோவில்கள் இருந்த இடத்தில் ஒரே ஒரு கோவிலுக்கு இடம் கொடுப்பதாக அரசு சொல்கிறது.

உருவ வழிபாட்டில் நம்பிக்கை யில்லாத இஸ்லாமிய அரசு, உருவ வழிபாடு கொண்ட இந்து சமயக் கோவில்களைத் தடை செய்ததில்லை. 'செந்தூர் முருகன்' கோவிலும், 'பத்துமலை முருகன் கோவிலு'ம் தைப்பூசவிழா கொண்டாடி மகிழ்கின்றன. நாடெங்கும் ஏராளமான சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில்களும் பரந்து காணப்படுகின்றன. 59 சதவீத மலாய் முஸ்லிம்கள் இருக்கும் நாட்டில் 4,000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் 8 சதவீத இந்தியர்கள் வாழும் நாட்டில் 17,000 இந்துக் கோவில்கள் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன என்பது உன்னதமான வரலாறு அல்லவா? (அரசாங்கமே நிதியுதவி கொடுத்துக் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடத்தி பிரதமர் பரிவட்டம் கட்டிக் கொண்ட காட்சியை நாமே பார்த்து ரசித்திருக்கிறோம். இதற்கிடையில் அரசாங்கத்தின் பொது இடங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் கட்டப்படும் கோவில்களை அரசு அப்புறப்படுத்தத் தானே செய்யும்? அவ்வாறு அத்துமீறிக் கட்டப்பட்ட கோவில்களும் பள்ளிவாசல் களும் ஆயிரக்கணக்கில் அப்புறப் படுத்தப்பட்டதைக் கடந்த காலம் கண்டிருக்கிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அங்கே வாழும் குடியுரிமை பெற்ற தமிழர்கள், இதுநாள் வரை இதைப் பிரச்சினை ஆக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகக் கணினி விற்பன்னர் களாகவும், உயர் தொழில் நுட்பக்காரர் களாகவும் அங்கே சென்ற இந்தியர் சிலர் 'இந்துக் கோவில்களுக்கு ஆபத்து' என்கிற விஷ விதையை ஊன்றத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது இந்தக் கருத்தின் உள்நோக்கம் புரியாத பூர்வீகத் தமிழர்களும் இதற்குப் பலிகடா ஆகியிருப்பதுதான் பரிதாபமான செய்தி. மலேஷிய பல்கலைக் கழகத்தில் இந்தியப் பிரிவு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே 'தமிழ் கலை, இலக்கியத்திற்கே இதுகாறும் முக்கியத்துவம் தரப்பட்டு மேம்பாடு காணப்பட்டது. அங்கே அண்மைக் காலத்தில் 'பாரதீயப் பண்பாட்டு விழா' என்கிற விழாவை ஏற்படுத்தி அதில் இந்துத்துவச் சாயல் கொண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தத் தொடங்கினர். 'பாரதீயம்' என்கிற வார்த்தை எத்தகைய பூர்வீகம் கொண்டது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. கடந்த 2006ஆம் ஆண்டில் இப்படிப் பட்ட ஓர் விழாவை ஏற்பாடு செய்து தமிழ்நாட்டிலிருந்து இந்துத்துவச் சிந்தனையாளர்கள் சிலரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்துப் போயிருக்கின்றனர். தமிழகத்திலிருந்து போனவர்கள் 'சமஸ்கிருத ஸ்லோகம்'லி பஜனைலிஆன்மீகப் பயிற்சி என்ற வரிசையில் ஆர்.எஸ்.எஸ்.பாணியில் விழாவை நடத்தியிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியா விலிருந்து தமிழர்கள் சிலரைக் கலாச்சாரப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்லித் திருச்சிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அங்கே அவர்கள் நடத்திய வகுப்புகளில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் தமிழர் பண்பாட்டுக்கெதிரான ஆரியத்தின் கூரிய ஆயுதங்கள் என்பதைக் கண்டு கொண்ட மலேஷியத் தமிழர்கள் வகுப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு மலேஷியா திரும்பி விட்டனர். (பெயர்களைச் சொல்வது நல்லதல்ல என்பதால் விடுகிறோம்)

இந்தியர்கள் நலனுக்காகப் போராடுவதாகக் கிளம்பியிருக்கும் இவர்கள் தங்கள் அமைப்புக்கு வைத்திருக்கும் பேர் என்ன தெரியுமா? 'ஹிண்ட்ராஃப்' என்பதுதான். (ஐண்ய்க்ன் தண்ஞ்ட்ற்ள் ஆஸ்ரீற்ண்ர்ய் எர்ழ்ஸ்ரீங்) அதாவது, 'மொழிவழி மக்களான தமிழர்களுக்கான போராட்டமெனில் 'தமிழர் கோரிக்கைக் குழு' எனப் பெயர் சூட்டியிருக்கலாம் அல்லது 'இந்தியர் நலம் நாடும் சங்கம்' எனச் சொல்லியிருக்கலாம். இடையில் 'ஹிந்து உரிமை', எங்கிருந்து வந்தது. ஓர் இஸ்லாமிய நாட்டில் இந்து மதத்தின் பெயரால் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கினால் ஓர் தேசிய அரசு அதை எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்? துபாய் போன்ற அரபு நாடுகளில் இப்படிப்பட்ட அமைப்பு ஒரு நிமிடம் உயிர் வாழ முடியுமா என்பதை எண்ணிப்பாருங்கள், தென் கிழக்கு ஆசியாவிலேயே மதத்தின் பேரால் ஆளும், மிகச் சிறந்த ஜனநாயக நாடு என மலேஷியா பேர் பெற்றிருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது பிரிட்டிஷ் தூதரகத்திடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துப் போராடு கின்றனர். தங்கள் மூதாதையர்களைத் தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் உழைப்புக் கூலிகளாக அழைத்து வந்து பிரிட்ஷ் அரசு ஏமாற்றிவிட்டது என்றும், அதற்காக ஒரு தமிழருக்கு 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மலேஷி யாவை விட்டுப்போய் அரை நூற்றாண் டாகிவிட்டது. இப்போது இப்படியொரு வினோதமான கோரிக்கை: உலக நாடுகள் இதைப் பார்த்து எள்ளி நகையாடாதா? இந்தக் கோரிக்கையோடு இங்கிலாந்து தூதரகத்திற்கு ஊர்வலம் புறப்பட்ட போதுதான் மலேஷியக் காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது. கலவரம் வெடித்தது. முன் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஓர் அரசு எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்? கடந்த தீபாவளிக்கு முதல் நாள் (2007லி அக்டோபர்), அத்துமீறிக் கட்டப்பட்ட ஒரு கோவில்லிஒரு பள்ளிவாசல் முப்பத்திரண்டு வீடுகளை அரசு அப்புறப்படுத்தியது. இதுகுறித்தும் 'ஹின்ட்ராஃப்' அமைப்பு ஆத்திரப்படுகிறது.

அன்னிய மண்ணில் வாழப் போன வர்கள் அந்த அரசின் சட்ட திட்டங்க ளுக்கு உட்பட்டே வாழ்க்கை நடத்த வேண்டும். அத்துமீறினால் அல்லல்தான். இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்கள் செய்யும் கொடுமையைப் போன்றதல்ல மலேஷிய நிலை. இப்படிப்பட்ட ஆர்ப் பாட்டமும், போர்ப்பாட்டும் தொடரு மானால் எதிர்காலத்தில் இந்தியர்கள் யாருக்கும் அங்கே விசாவோ குடியுரிமையோ கிடைக்காமல் போகலாம். இது கொள்ளிக்கட்டையால் தலையில் எடுத்துச் சொறிந்து கொள்ளும் முயற்சி.

நன்றி:லி ஜனசக்தி நாளிதழ்

டிசம்பர் 6: ஆறாத மனம்... காயாத ரணம்...

டிசம்பர் 6: ஆறாத மனம்... காயாத ரணம்...
ஜி.அத்தேஷ்



காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றிவிடும்; வடுக்கள் அதன் நினைவு களை அறிவுறுத்திக் கொண்டிருக்கும். ஒரு சமுதாயத்தின் தனித்தனி இதயங் களை உடைத்து நொறுக்க முடியாதவர் கள், இதயங்களில் வாழும் புனிதங்களை அவமதித்து மனங்களைப் புண்படுத்தி விடுகின்றனர். அப்படித்தான் நிகழ்ந்தது அந்த தேசிய சோகம்.

14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்பட்ட நிகழ்வு. 1992 டிசம்பர் 6ம் நாள் அஃது ஓர் ஞாயிற்றுக்கிழமை. மதவெறி பிடித்த ஒரு கடப்பாரை கூட்டம், இந்நாட்டின் பெரும்பான்மை சமூகம் மதிக்கும் இந்து மதத்தின் பெயரால், ராமனின் பெயரால், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது. ராமரின் பக்தனை வெறியனாக்கிய ஜனசங்கம், நீறுபூத்த நெருப்பாக, இந்திய ஜனநாயகத் தையும், மத சகிப்புத்தன்மையையும் வேர் பிடித்து வளர்ந்திருக்கிறது. ஆதிக்க சக்திகளால் எழுதப்படும் ஊடகங்களும், வாசிக்கப்படும் செய்திகளும் இந்துத்துவ வகுப்பு வெறியை கொழுந்து விட்டு எரியச் செய்தன. இவற்றின் அறுவடை யாக, சர்வதேச அளவில் முன்னுதாரண மாக நிகழ்திருக்க வேண்டிய நம் இந்திய தேசம் அவமானப்பட்டுக் கிடக்கிறது. 1992 டிசம்பர் 7ம் நாள் (மஸ்ஜித் இடிக்கப்பட்ட மறுநாள்) தொலைக்காட்சியில் அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமர் நரசிம்மராவ், ''மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டித் தரப்படும்'' என்றார். நாட்டின் தலைமை பீடமான பிரதமரின் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தனர். இளம் வயதில் ஜனசங்கம் ஊட்டிய வகுப்பு வெறி, நரசிம்மராவை இறுதிவரை மன்னிப்புக் கேட்க அனுமதிக்கவில்லை. நரசிம்மராவ் தவறிழைத்து விட்டார் என்று நேரு குடும்பம் தற்போது கூறிவருகிறது. அதே நேரம், 1949 டிசம்பர் மாதம் 22ம் தேதி, அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜித்தில் சமூக விரோதிகள் ராமன், லட்சுமணன் மற்றும் சீதையின் கற்சிலைகளை தொழுகை தலத்தில் வைத்துவிட்டு திரும்பியதில் இருந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நேரு பிரதமராக இருந்திருக் கிறார். அப்போது உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதே, யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்ட சிலைகளை யாருக்கும் தெரியாமல் வெளியே எறிந்து விட நேருவுக்கு தைரியமும், தொலை நோக்குப் பார்வையும் இருந்திருக்க வில்லை.



மஸ்ஜித்தை உடனே பூட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது எவ்வளவு அடிமுட்டாள்தனமான செயலாகும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் தேசிய அளவில் முடிவெடுக்கும் தார்மீக உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு என்று கூறிய நேருவுக்கு, சிலைகள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் யாருக்கு சொந்தமாக இருக்க முடியும் என்பதில் முடிவெடுக்கும் உரிமை எப்படி இல்லாது போனது? சர்வாதிகாரி சர்தார் வல்லபாய் பட்டேலு டன் இணைந்து குஜராத்தின் சோம்நாத் நகரில் இருந்த ஒரு பள்ளிவாசலை தகர்த்துவிட்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்பட காரணமான நேருவுக்கு, பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் மதச்சார்பற்ற முடிவெடுக்கும் மனம் இருந்திருக்க வாய்ப்பில்லை.

1949ல் பூட்டப்பட்ட பள்ளிவாசல் வளாகம் 1987ஆம் ஆண்டு ராம்நியாஸ் என்ற சிறப்பு பூசைக்காக வளாகம் திறந்து விடப்பட்ட போது தான், இப்படி ஒரு பிரச்சனை இருந்து வருவது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. பாபர் மஸ்ஜித் நிர்வாகத்திற்கும், அதை கோயில் என்று வாதாடும் ஒரு கூட்டத்திற்கும் இடையே மட்டும் இருந்து வந்த வழக்கு தேசிய இனங்களின் தன்மானப் பிரச்சனையாக்கப் பட்டது. 1987ல் ஷாபானு தொடர்பான ஜீவனாம்ச பிரச்சினையில்லிபிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத்தின் ஓட்டெடுப்பு மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முறியடித்தார். அதற்கு பரிகாரமாக இந்துத்துவ கும்பலின் நீண்டநாள் கோரிக்கையான பாபரி மஸ்ஜித் பிரச்சினைக்கு ராஜீவ் காந்தி வழிவிட்டார். இதிலிருந்துதான் இந்திய ஒற்றமையை சீர்குலைக்கும் சில்மிஷ வேலைகள் ஆரம்பமாயின. 1987க்குப் பிறகே 1992 டிசம்பர் 6ல் பூஜைகள் செய்வதற்காக அத்வானி தலைமையிலான மதவெறிக் கூட்டம், பாபர் மஸ்ஜித் வளாகம் சென்றது. மஸ்ஜித் இடிக்கப்பட மாட்டாது என்று அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு வாக்குறுதி அளித்தனர். மஸ்ஜித் பாதுகாக்கப்படும் என மத்திய அரசும் உறுதி கூறியது. பாதுகாப்புக்காக(?) சில மைல் தொலைவு களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ராணுவம், ராம பக்தர்களாக மாறி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கோயிலை நோக்கி கையெடுத்து கும்பிட்டு நின்றது. இடிக்கப் பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டப்படும் என்பதே முன்னாள் பிரதமரின் வாக்குறுதி, மற்றும் முஸ்லிம்களின் கோரிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக 1947க்குப் பிறகு, எந்தெந்த இடத்தில் எந்தெந்த சமயத்தின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றனவோ அவை அவ்வாறே பாதுகாக்கப்படும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அந்தச் சட்டம் பாபர் மஸ்ஜிதையும் உள்ளடக்குகிறது.



இதற்காகத்தான் முஸ்லிம் சமூகம் 14 ஆண்டுகளாக விடாமல் போராடி வருகின்றது. எனவே இடித்த இடத்தில் மஸ்ஜித் மீண்டும் கட்டப்படுவதும், அமைப்புச் சட்டத்தின் உறுதிமொழியை நிறைவேற்றுவதும் அரசுக்கும், நீதித்துறைக்கும் கடமையாக இருக்கும் போது, அந்த அமைவிடம் யாருக்குச் சொந்தம் என்ற விவாதம் அர்த்தமற்ற தாகும். ஓர் உதாரணத்திற்கு, இடம் த.ந.ந.க்கு சொந்தம் என்று தீர்ப்பானால், இடித்த இடத்தில் அளித்த வாக்குறுதிப்படி பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்டி அதன் நிர்வாகம் பொறுப்பை நரேந்திர மோடியிடமா கொடுப்பது? என்ன பிதற்றலான வாதம். ஆனால் அறிவு ரீதியான வாதங்களை புறந்தள்ளி விட்டு, பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் முன்னர் ராமர் கோயில் இருந்ததா? அங்கே ராமர் பிறந்து, வாழ்ந்து, ஆட்சி செய்தாரா? என்றும் ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும் படி தொல்லியல் துறை பணிக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய வேடிக்கை.

புராண கணக்கீட்டின் படி ஒரு யுகத்திற்கு 5 லட்சம் வருடங்கள், முதல் யுகமான திரேதா யுகத்தில் ராமர் பிறந்தார் என்பது இந்துத்துவாக்களின் நம்பிக்கை. அரசியலமைப்பு சட்டத்தால் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்ட பெரும்பான்மை இந்திய சமுதாயத்திற்கு இந்த கணக்கு எல்லாம் தெரியாது. அப்படியானால் 4 யுகங்களில் முதல் யுகமான திரேதா யுகத்தின் இன்றைய ஆயுள் கிட்டத்தட்ட 20 இலட்சம் வருடங்களுக்கு முந்தியது. கற்காலத்திற்கும் முற்பட்டதாக கருதப்படும் இதிகாச மனிதர்களின் தடம் பற்றி தகவல் அறிய தொல்லியல் துறை சம்மதித்து இருப்பது தேசிய நகைச்சுவை. ஒரு வேளை இந்துத்துவ சக்திகள் சில தகிடு தத்தங்களின் வழியே தங்களுக்குத் தோதான ஒரு தீர்ப்பினை உச்சநீதி மன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டால், அதன் வழியே, ராமர் அங்குதான் பிறந்தார் என்றோ, அல்லது கோயில் இடிக்கப்பட்டது என்றோ முடிவுகள் வெளியாகுமானால், பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் வழக்கு என்ன வாகும்? அதற்காக சட்டத்தால் யாரையும் தண்டிக்க முடியாதே. மஸ்ஜித் இடிக்கப் பட்ட இடத்தில் கோயில் கட்டுவது சரி என்றால் மஸ்ஜித் இடித்தவர்களை தண்டிப்பது நியாயமாகாது. இடித்தவர் களை தண்டிப்பது சரி என்றால் கோயில் கட்டுவது நியாயமாகாது. அரசும், நீதித் துறையும் என்ன செய்யப் போகின்றன?



மஸ்ஜித் இடிக்கப்பட்ட அன்று, உமா பாரதியும், முரளிமனோகர் ஜோஷியும் கட்டித் தழுவி மகிழ்ச்சி வெளிப்படுத்திய காட்சி ஊடகங்களிலே உலா வந்தது. மாநிலம்தோறும் ர(த்)தம் ஓட்டி கூட்டம் திரட்டிச் சென்றவர் அத்வானி. இவர்கள் எல்லாம் தண்டனையில் இருந்து தப்பி இன்றுவரை சுதந்திரமாக உலாவருகிறார் கள். மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் பின்னணி யில் கிடைத்த அரசியல் வளர்ச்சியைக் கொண்டே பிரதமர்களாகவும், மாநில முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி சுகம் கண்டார்கள்.

14 ஆண்டுகள் ஆகியும் வெளிவரத் தயங்கும் இவர்கள் மீதான தீர்ப்பு, வெளிவரும் தினத்தில், இவர்கள் ஆண்டு அனுபவித்து நீதியின் தண்டனைக்கு தப்பியவர்களாக மரணித்திருக்கலாம். நீதிமன்றம் தீர்ப்புகளை வாசிக்கும் போது, அதனை கேட்பதற்குக் கூட குற்றவாளி கள் பூமியில் உயிருடன் இருக்க மாட்டார்கள்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கும் அங்கு ராமர் கோயில் இருந்தது என்ற வாதத்திற்கான வழக்கும் சேர்த்து விசாரித்து வரும் லிபரான் கமிஷனின் முடிவுகள் இன்னும் சில மாதங்களில் வெளி வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தீர்ப்புகளின் மீது நெருப்புகளை பற்ற வைக்கும் சதித்திட்டங்களை மோடிகளும், கேடிகளும் உருவாக்கு வார்கள். ராமர் கோயில் பிரச்சனையில் வெளிவர இருக்கும் தீர்ப்புகளை மிரட்டும் ஒரு முன்னோட்டமாகத்தான் ராமர் பாலம் தொடர்பான சர்ச்சையை நீதிமன்றம் மூலம் பிரச்சனையாக்கினார்கள்.

நாம் எதிர்பார்ப்பது வெறும் தீர்ப்பு களை மட்டுமல்ல, பிரச்சனைக்கான தீர்வுகள். பாபர் மஸ்ஜித் வளாகம் முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்ற உரிமைப் பூர்வமான தீர்வும், இடித்த இடத்தில் மீண்டும் பழம் பெருமையுடன் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும் என்ற தீர்ப்பும், அவ்வாறு தீர்ப்பளிக்கும் தைரியமும், நியாய உணர்ச்சியும் நீதிபதிகளுக்கு அவசியப்படுகிறது.

இந்திய ஜனநாயகத் தின் அதிகபட்ச அதிகாரம் நாடாளு மன்றத்துக்கே உரியது என்றாலும், அரசியல் வாதிகள் எப்போதும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு தூரமாகவே இருந்து வருகின்றனர். அதனால் அறிவுஜீவிகள் தொடங்கி சாமானிய மக்கள் வரை அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கும் அமைப்பு நீதிமன்றம் தான். அந்த நம்பிக்கையின் உச்சபட்சம் உச்ச நீதிமன்றத்தின் மீது இருக்கிறது. ஆனால், நீதிமன்றங்களின் செயல்பாடுகளிலும், கூட பாரபட்சங் களும், சமயச்சார்பும் காணப்படுகின்றன. உச்சநீதிமன்றமா? உச்சி குடுமி மன்றமா? என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அதன் நடவடிக்கைகள் பாரதூரமாக அமைந்திருக்கின்றன.

பாபர் மஸ்ஜித் பூட்டப்பட்டு 58 ஆண்டுகள் ஆகியும் அதன் மீதான நியாயத்தை நீதிமன்றங்களால் வெளிப் படுத்த முடியவில்லை. அதேநேரம், இந்துத்துவ சக்திகளுக்கு ஓர் ஆபத்து ஏற்படும் என்றால் விடுமுறை நாட்களிலும் கூட நீதியின் கதவுகள் திறந்து கொள்கின்றன. கொலைக்குற்றமும், காமவெறிக்குற்றமும் சுமத்தப்பட்டு காஞ்சி காமகோடி ஜெயேந்திரர் கைது செய்யப்படுகிறார். நீதிமன்றங்களின் விடுமுறை நாளான அன்று சிறப்புச் சலுகையாக நீதிமன்றம் திறக்கப்பட்டு ஜாமின் வழங்கப்படுகிறது. அதுவே, எந்தக் குற்றம் செய்யாதவர் என்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையான அப்துந் நாசர் மதானிக்கு மூன்று முறை உச்சநீதிமன்றமே ஜாமின் மனுவை நிராகரித்துள்ளது, சிறுபான்மையினரை சில சமூக விரோதிகளும், அரசியல் விரோதிகளும், தேசிய மதச்சார்பின்மை யின் எதிரிகளும்தான் இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறார்கள் என்றால், சில நேரங்களில் நீதிமன்றங்களும் அந்தப் புள்ளியை நோக்கி நகர்த்தப்படுகின்றன.

நீதிமன்றங்களிலே இருக்கும் கறுப்பு ஆடுகளுக்கும், வெளியே திரியும் வகுப்பு வெறி சக்திகளுக்கும் இடையே கண்ணுக்கு புலப்படாததோர் மெல்லிய இழை இரு முனைகளையும் இணைத்துக் கொண்டிருப்பதை மனித நேயர்கள் சுட்டிக் காட்டவும் தவறுவதில்லை. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் வடிகட்டிய மீதமாக நீதிமன்றங்களே இருப்பதால் இந்த ஆண்டின் டிசம்பர் 6ஆம் தினத்தில், நீதிமன்றங்களின் கவனத்தையும், சட்டக் காப்பாளர்களின் நடவடிக்கையையும் துரிதப்படுத்தும் வண்ணம், நீதிமன்றங்களின் முன் போராட்டம் நடத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவு செய்திருக் கிறது.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் ஆத்திரத்தில் எழுந்த அறிவு மயக்கத்தால், நாடெங்கும் வீசியெறிப்பட்ட வன்மு றைக்கு ஏதும் அறியாத அப்பாவி மக்கள் பலியாகி வந்தனர். ஒவ்வொரு குண்டு வெடிப்பு ஒலங்களின் இரைச்சலால் முஸ்லிம் வீடுகளின் இரவுகள் அச்சத் துடன் விழித்திருந்தன. கைதுகளும், வழக்குகளும், அவமானங்களும், வழமை யாயின.
அதுவே, குஜராத்தின் கோர படுகொலைகளை நியாயப்படுத்தவும் காரணமாயின. தமிழ்நாட்டு இளைய சமுதாயமும் மதவாத சக்திகளின் சதிகளுக்கு பலியாகிப் போகாமல் தடுக்க, த.மு.மு.க. சாத்வீகமான, அமைதி வழிப் போராட்டங்களை கையிலெடுத்தது. ஆரம்பக் கட்டத்தில் அதன் மீது விழுந்த சந்தேகப்பார்வைகளையும், எதிர்ப்புகளையும், பழிச் சொற்களையும் தன் மீதே சுமந்து, சமூகத்தின், இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம், பாதுகாவல், குடும்பங்களில் நிலவவேண்டிய சாந்தி சமாதானத்திற்காக பல்வேறு தியாகங் களைச் செய்து பல வெற்றிகளை இறையருளால் பெற்றிருக்கிறது.

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில், தேசிய அளவில் முஸ்லிம்களை ஒருமுகப்படுத்தி போராடவும் தமுமுக திட்டங்களை வகுத்து வருகிறது.

பாபர் மஸ்ஜித் மீதான உரிமை மீட்புக்காக தொடர்ந்து தன் முனைப்பான போராட்டங்களை வருடம் தவறாமல் நடத்தி, உறங்குபவர்களையும் தட்டி எழுப்பி, எதிரிகளை எச்சரித்து வருகிறது. அதன் போராட்டப் பயணத்தில் நீதிமன்றங்களுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்க மைல்கல்.

Wednesday, November 21, 2007

ஹஜ் யாத்திரை விளம்பரம் தேவையா?


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை இறைவனை துதிப்பதற்கான ஒன்றாகவே இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஹஜ் யாத்தி ரைக்குச் செல்வோர் விருந்தோம்பலை நடத்தி, உறவினர்களுக்கும், ஊர்க்காரர் களுக்கும் பயண செய்தியை தெரிவிப்பார் கள். பகையாளிகளை கூட சந்தித்து தங்கள் பயணத்திற்காக பிரார்த்திக்க சொல்வார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் ஹஜ் பயணத்தை ஒரு விளம்பரமாகவும், புகழுக் கான ஒன்றாகவும் சிலர் பயன்படுத்துவது வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதனால் தூய எண்ணங்களோடு ஹஜ்ஜுக்குப் புறப்படும் ஹாஜிகளுக்கும் மரியாதைக் குறைவு ஏற்படுகிறது.
பள்ளிவாசல்களில் ஜும்மா தொழு கைக்குப் பிறகு பயண செய்தியை அறிவிப்பது விருந்தோம்பல் செய்வது இவையெல்லாம் குற்றமாக பார்க்கப் படுவதில்லை. யாரும் இதை விமர்சிக்கவும் மாட்டார்கள். ஆனால் சமீப வருடங் களாக நிலை மாறி வருகிறது. அரசியல் வாதிகளை அழைத்து வாழ்த் தரங்கம் நடத்துவது, ராட்சத டிஜிட்டல் பேனர்கள், சுவர் விளம்பரங்கள், ஆள் உயர போஸ்டரில் ஹஜ் பயணியின் சிரிக்கும் படம், வாழ்த்து சுவரோட்டிகள் என 'அரசியல்' வாடை வீசத் தொடங்கி யுள்ளது.
இவையெல்லாம் முற்றிலும் மார்க்கத் திற்கு விரோத மான செயல்களாகும் இப்படியெல்லாம் செய்து ஹஜ் யாத்தி ரைக்கு செல்வது அதன் நோக்கத்தை சிதைப்பதாகும். இதையெல்லாம் செய் பவர்கள் யார் என்பதை கவனித்தால் அவர்கள் இதற்கு முன்பு மார்க்கத்தை சரிவர பின்பற்றாமல் ஜும்மாவுக்கு மட்டுமே பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்களாக இருப்பவர்கள் என்பது தான்!
பொதுவாக ஐவேளை தொழுகைப் பேணுபவர்களும், மார்க்ககத் தின்பால் ஈடுபாடு உடையவர்களும் இதுபோன்ற 'அரசியல்' கூத்துகளை நடத்துவதில்லை. சிறிய விருந்துடன் பயண செய்தியை கூறிவிட்டு புறப்படுகிறார்கள். அவர் களை ஊர் மக்களும், ஜமாத்தோடு கூடி வழியனுப்பி வைக்கி றார்கள்.
இப்படிப்பட்ட உண்மையான ஹஜ் யாத்திரீகள் பெருமைக்கும், புகழுக்கும் விளம்பரம் செய்து ஹஜ்ஜுக்கு புறப்படும் நபர் களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுமத நண்பர்களும் கூட, மக்காவுக்கு செல்வதை மரியாதை யுடன் நோக்குவார்கள். அவர்களும் தங்கள் முஸ்லிம் நண்பர்களை வழிய னுப்ப பழங்களோடும், இனிப்புகளோடும் வருவார்கள். இப்போதும் வருகிறார்கள்.அவர்களும் கூட இத்தகைய விளம்பர பிரியர்களின் நடவடிக்கைகளினால், ஹஜ் பயணத்தின் நோக்கத்தைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் சூழல் உருவாகிறது. இதெல்லாம் குர்ஆன் ஹதீஸ் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்பதை அவர்களுக்கு இதை சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும்.
இந்நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உலமாக்கள் இது குறித்து ஜும்ஆ பிரசங்கத்தில் அறிவுறுத்த வேண்டும். ஜமாத் தலைவர்கள் இதற்கு துணை புரிய வேண்டும்.
இல்லையெனில் புனிதமான ஹஜ் யாத்திரை எதிர்காலத்தில் கேலிக்குரிய தாக மாறிவிடும். இதை தடுக்காதவர்கள், நாளை மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.
இதை படிக்கும் சகோதரர்கள் துண்டு பிரசுரங்கள் மூலமாகவோ, பிரதி எடுத்தோ வினியோகித்து சமூகத்தில் தீமைகள் பரவாமல் தடுத்து நிறுத்த உதவ வேண்டும்.

Thursday, November 15, 2007

முஸ்லிம்கள் முகத்தில் விழிப்பதற்கே அவமானமாக இருக்கிறது...

தமிழ்மாறன்

குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை நாட்டிற்கு அவமானம், நீதித்துறைக்கு அவமானம் என்று பரவலாக பேசப்படு கிறதே ஒழிய பெருமைக்குரிய ஹிந்து மதத்தின் பேரால் இத்தகைய காட்டு மிராண்டித்தனத்தை நிகழ்த்திய கயவர் களைக் கண்டிக்க யாருக்கும் நா எழவில்லை.

தமது மதத்தை களங்கப்படுத்திய வர்கள் குறித்து பெரும்பாலான ஹிந்து குரு பீடங்கள், மகா சன்னிதானங்கள் கண்டுகொள்ளவேயில்லை, (ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி அக்னிவேஷ் மட்டும் விதி விலக்கு) நமது நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு யார் காரணம் என்பது கண்டறியப்படுவதற்கு முன்பே முஸ்லிம் பெயர்கள் ஊடகங்களில் உச்சரிக்கப்படுகின்றன. ஊடகங்கள் குறிப்பிடும் நபர்களோ இயக்கங்களோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இருப்பினும் மனித உயிர்கள் பலியாவதைக் கண்டு மனம் பொறுக்காத முஸ்லிம் அமைப்புகள். தலைவர்கள் உடனடியாக தங்களது கண்டனங்களை பதிவு செய்வார்கள். இருந்தாலும் முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் வகையில் செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடும். எனது கேள்வி அது பற்றியதல்ல? முஸ்லிம்களைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்டது.

எங்கேயோ எவனோ நிகழ்த்திய குண்டு வெடிப்பிற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இதயங்களையும் குத்திக்கிழிக்க குரு மூர்த்திகளின் எழுதுகோல்கள் ரத்த தாகத்துடன் காத்திருக்கும்.

வெடிகுண்டு சம்வங்களில் தொடர்புடையவன் என்று கூறுவோர்கள் கூட தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பெயர்களைத் தான் கூறுவது வழக்கம். நமது ஐயம் என்னவெனில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட இயக்கங்கள் அனைத்தும் நாட்டு மக்களிடையே செயல்படும் இயக்கங் களாகவே இருக்கின்றன. பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி.. பஜ்ரங்தள், ஏபி.வி.பி. போன்றவை பதிவு செய்யப் பட்ட இயக்கங்கள் பாஜக அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி. ஆளுங்கட்சியாக இருந்து விட்டு தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அது மட்டுமின்றி அடுத்து ஆளுங்கட்சியாக வரவும் அது துடித்துக் கொண்டிருக்கிறது.

இங்குள்ள பல பிரமுகர்கள், அமைப்புகள் சாமியார்கள் என பல்வேறு தரப்பின ரும் சங்பரிவாருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள் ளனர். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் குரு பூஜைகளிலும், இந்து முன்னணியால் நடத்தப்படும் திருவிளக்கு பூஜைகளிலும் முக்கிய வர்த்தகப் புள்ளிகளும் கலந்து கொள்கின்றனர். பொது மனிதர்கள் வேடம் போடும் இவர்களோ, நாட்டின் பெரும் பான்மையான வெகுஜன ஊடகங்களோ குஜராத் இனப்படுகொலை குறித்து ஏதும் சொல்ல வில்லையே? என்பது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அது அவர்களுக்கு வியப்பாக இருக்கலாம் நமக்கு அவ்வா றல்ல, நம்முடைய சந்தேகங்களெல்லாம் கோத்ராவில் நிகழ்ந்த விபத்தை முஸ்லிம்கள் செய்த சதியாக செய்திகளை பரப்பி திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் சொன்னதெல்லாம் ஆதாரமற்ற கட்டுக்கதை என பானர்ஜி கமிஷன் ரிப்போர்ட் கூறியது. தற்போது தெஹல்காவின் பதிவுகளும் நிரூபிக் கின்றன. சாட்சிகளை மிரட்டி முஸ்லிம்கள் மீது பழிபோடச் சொன்ன குஜராத் காவல் துறையின் ஈனச்செயலும் அதனை முழுநேரக் கடமையாகச் செய்த சங்பரிவாரின் ஆண்மையற்ற செயல் குறித்த செய்திகள் வரத்தொடங்கியுள்ள நிலையில், பொய்யான ஒரு தகவலை கர சேவர்களின் பெயரால் ஹிந்து மதத்தின் பெயரால் பரப்பியதால் அநியாயமாக படுகொலைகள் நிகழ்த்தியது குறித்து இங்குயாரும் வெட்கப்படவில்லையே? ஏன்? முஸ்லிம்கள் தானே செத்துத் தொலையட்டும் என்று அவர்கள் ஆறுதலடைந்து தொலையட்டும். ஆனால் ஹிந்து மதத்தின் பெயர் உலக அளவில் மாசுபட்டு போனதே இது குறித்து இவர்களுக்கு சிறிதும் கவலை யில்லையே?

தெஹல்கா பதிவுகளில் கயவர்களின் வாக்கு மூலங்களைப் பார்க்கும் போது கோத்ராவில் நடந்தது விபத்தல்ல. முஸ்லிம்கள் நடத்திய சதியுமல்ல. சங்பரிவார் சக்திகளால் நடத்தப்பட்ட கொடும் சதி என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது. ஹிந்து மதத்தின் பெருமை குறித்து பெருமிதம் அடைபவர்கள் இது குறித்து கவலைப்படவில்லை என்பது குறித்து விளைக்குறிகள் விடைத்து நிற்கின்றன.

இந்த கொடும் சதிகள் குறித்து இவர்கள் ஒன்றும் அறியாமல் இருந்திருக்க வேண்டும். அதாவது 2007 அக்டோபர் 25 ஆம் தேதியிலிருந்து (தெஹல்கா உண்மைகளை அம்பலப்படுத்தியதிலிருந்து) இவர்கள் கோமாவில் கிடந்திருக்க வேண்டும் அல்லது இந்த குற்றச் செயல்கள் குறித்து மானசீகமாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலான ஊடகங்களும் குஜராத் இனப்படுகொலை குறித்து மூச்சு கூட விடவில்லை. இவர்களின் இழிசெயலைக் காணும் போது அவமானம் தாங்க முடியவில்லை.

முஸ்லிம்களின் முகங்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை. ஏனெனில் நான் மனித மனம் படைத்தவன்.

Wednesday, November 14, 2007

ஹோதா என்ன சாதாவா? காழ்ப்புணர்வு மிகுந்த ஜூனியர் விகடன் கட்டுரை


ஹோதா என்ன சாதாவா என்ற தலைப்பில் தமிழக முதல்வரின் தனிச் செயலாளர்களில் ஒருவரான முனீர் ஹோதா அவர்கள் மீது அவதூறு தெரிவித்து வெளியிட்ட கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பின்வரும் கடிதத்தை ஜூனியர் விகடன் வெளியீட்டாளர் பா. சீனிவாசன் அவர்களுக்கு 11.11.2007 அன்று அனுப்பியுள்ளார்கள்.



பெறுநர்

திரு. பா.சீனிவாசன் அவர்கள்
வெளியிட்டாளர்
ஜுனியர் விகடன்
34, கிரீம்ஸ் சாலை
சென்னை லி 600 006.


அன்புடையீர், நலம் பல சூழ்க...

ஜுனியர் விகடன் 9.11.2007 தேதியிட்ட இதழில் 'ஹோதா என்ன சாதாவா' என்ற தலைப்பில் தாங்கள் வெளியிட்ட கட்டுரையில் கடும் ஆட்சேபனைக்குரிய விஷமத்தனமானக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

முதல்வரின் முதன்மைச் செயலாளரான திரு.முனீர் ஹோதா இ.ஆ.ப., அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை வெளியிட்டிருக்கிறீர்கள்.

இதேபோல் முதல்வரின் மற்றொரு செயலாளரான பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. ராஜமாணிக்கம் இ.ஆ.ப., (ஒய்வு) அவர்களைப் பற்றியும் சில இதழ்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளைப் பொழிந்து எழுதி இருந்தீர்கள்.

ஆதாரங்களற்ற அவதூறுகளை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பு நோக்கில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதுதான் இதழியல் அறமா என்பதை தரம் வாய்ந்த பத்திரிகையின் பொறுப்பாளரான நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திரு. முனீர் ஹோதாவை, அவரது நிர்வாக முடிவுகளை முன்வைத்து, நீங்கள் விமர்சிக்க உரிமை உண்டு. அதேநேரம், முஸ்லிம் இனப்பற்றோடு செயல்படுகிறார் என்றும் முஸ்லிம் அதிகாரிகளை முக்கியப் பொறுப்பில் நியமிக்கிறார் என்றும் அவருடைய செயல்பாடுகளுக்கு மதச்சாயம் பூசுகின்ற அருவறுப்பான வேலையை நீங்கள் செய்யலாமா என்பதை யோசிக்க வேண்டுகிறோம்.

திரு. ஃபருக்கி (இ.ஆ.ப) அவர்களை தமிழக அரசின் தொழில்துறைச் செயலாளராக நியமித்தது தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு. இதில் முனீர் ஹோதாவுக்கு என்ன பங்கு இருக்கிறது? அப்படி இருந்தால், ஆதாரத்தோடு எழுதுங்கள். அதை விட்டுவிட்டு 'இனப்பற்று' என்ற தலைப்பில் அவதூறுகளை எழுதுவது முறையல்ல.

'குழுமத்திலும் குதியாட்டம்' என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ளவற்றில், ஜாஃபர் சேட், நஜ்முல் ஹோதா ஆகியோருக்கு பணி இடமாற்றம் செய்ததிலும், மதப்பற்று வெளிப்படுவதாக கொச்சைப்படுத்தி எழுதியுள்ளீர்கள். திரு. ஜாபர் சேட் (இ.கா.ப.) உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டது கடந்த மே மாதத்தில். அப்போது திரு. முனீர் ஹோதா நீண்ட கால விடுப்பில் இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிற மதத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, அதே மதத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் பணிமாற்றம் செய்தால் இப்படி எழுதுவீர்களா?

முதல்வரின் செயலாளர் பொறுப்புக்கு இணையான பொறுப்புதான் தொழில்துறைச் செயலாளர் பொறுப்பும். இவ்வாறிருக்க முனீர் ஹோதாவின் முயற்சியில் தான் ஃபருக்கி நியமிக்கப்பட்டார் என்பதும், ஃபருக்கியை இவர் தான் ஆட்டிப் படைக்கப் போகிறார் என்பதும் அபத்தமான அவதூறுகள் ஆகும்.

யார் யாரை எதில் நியமிக்க வேண்டும் என்பது தமிழக முதல்வருக்கு நன்கு தெரியும். இதில் முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு என்ன பங்கு இருக்கிறது?

பணிமாற்றம், பணி உயர்வு போன்றவை முதல்வரின் அனுமதிக்குப் போகாமல் நடக்க முடியுமா? முதல்வரின் செயலாளர்கள் தனி அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. முதல்வருக்கு உதவியாளர்களாக, ஆலோசகர்களாக மட்டுமே அவர்கள் செயல்பட முடியும். ஜு.வி. முதல்வரின் செயலாளர்களான முனீர் ஹோதா மற்றும் ராஜமாணிக்கம் மீது புழுதி வாரி இறைந்திருப்பது அது சில தீயசக்திகளின் தூண்டுதல்களுக்கு துணை போய் விட்டதோ என்று எண்ணத்தைத் தான் ஏற்படுத்தியுள்ளது.

உயர்பதவியில் இருப்பவர் முஸ்லிம் என்பதால், அவருக்கு மதச்சாயம் பூசி கொச்சைப் படுத்துவது, ஜு.வி போன்ற பத்திரிகைகளுக்கு தகுமான செயலா என்பதை நீங்கள் மனசாட்சியோடு யோசியுங்கள்.

'கடல் எல்லை பாதுகாப்பு' உள்நாட்டு உளவுத்துறை, பணம் கொட்டும் தொழில் துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்று எல்லா இடங்களிலும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களே நிர்வகிப்பது, யதார்த்தமாக நடந்த விஷய மாக யார்தான் ஒப்புக் கொள்வார்கள் லி என்று தாங்கள் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது, நாம் படிப்பது. ஜு.வி.யா இல்லை, சங்பரிவாராப் பத்திரிகையின் தமிழ் பதிப்பா? என்ற சந்தேகம் எழுந்தது.

தமிழகத்தில் பணியாற்றும் 296 ஐ.ஏ.எஸ் அலுவலர்களில் 10 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இதே போல் 231 ஐ.பி.எஸ் அலுவலர்களில் 8 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம் அதிகாரி களில் தமது திறமை, அற்பணிப்பு களங்கமற்ற சேவை மூலம் முத்திரைப் பதித்த ஒரு சில முஸ்லிம் அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் வருவதை பொறுத்துக் கொள்ளாதவர்களுக்கு ஜு.வி. வக்காலத்து வாங்குவது நியாயமா? உங்கள் வரிகள் தேசப் பற்று மிகுந்த இந்த அதிகாரிகளை மட்டுமல்ல மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் தேசப்பற்றையும் கொச்சைப்படுத்தியுள்ளது.

இந்திய தேசத்தைக் கட்டியமைத்து, இந்த தேசம் அடிமைப்பட்டபோது, விடுதலைக் குப் போராடி மற்ற சமூகங்களையெல்லாம் விட மிக அதிக அளவில் உடல், பொருள், ஆவியை இந்நாட்டிற்காக அர்ப்பணித்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், முக்கியப் பதவிகளில் இருக்கக்கூடாதா? ஏனிந்த காழ்ப்புணர்வு? உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அறுதிப் பெருன்பான்மையாக இருப்பதை நீங்கள் கண்டித்து எழுதியதுண்டா?

முனீர் ஹோதா மீதான குற்றச்சாட்டுகளை முதல்வரே விசாரிக்க நினைத்தாலும் அரசுத்துறை அதிகாரிகள் மூலம் விசாரித்தால் பயனில்லை, நம்பிக்கையான தனியார் ஏஜென்ஸி மூலம் தான் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். நல்லவேளை, இந்து முன்னணி, பா.ஜ.க., அதிமுக போன்ற அமைப்புகள் மூலம் தான் முனீர் ஹோதாவை விசாரிக்க வேண்டும், என்று நீங்கள் எழுதவில்லை. இந்தப் பெருந்தன்மையை பாராட்டுகிறோம்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம். அதன் நேர்மையும், நம்பகத்தன்மை யும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

உயரதிகாரிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டிய மகத்தான பணி இதழ்களுக்குரியது. மதக் காழ்ப்புணர்வோடு எழுதுவது இதழியலையே இழுக்குப் படுத்துவதாக அமையும்.

முனீர் ஹோதா பற்றிய ஜு.வி.யின் காழ்ப்புணர்வு மிகுந்த கட்டுரையைக் கண்டிக்கிறோம்.

ஒரு தனிப்பட்ட அதிகாரியை தரக்குறைவாக எழுதும் முயற்சியில், ஒரு சமுதாயத் தையே தாங்கள் இழிவுபடுத்தியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

இக்கடிதத்தை நீங்கள் பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் எழுதவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அரசு அதிகாரிகüன் செயல்களுக்கு மதச் சாயம் பூசி அவர்களையும், அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும் கொச்சைப்படுத்தும் மஞ்சள் ரக இதழியல் மாண்பை நீங்கள் கடைப்பிடிக்கக்கூடாது என்ற நோக்கத் துடன் தான் இதனை எழுதியுள்ளேன்.

(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

வாணியம்பாடி: பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏன்?


வாணியம்பாடி: பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏன்?
ஆய்வுக் கட்டுரை
வி.என். முகம்மது உசேன்

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்கள் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, சைகோன், சிலோன் என்று வெüநாடுகளுக்கு வேலை தேடிச் சென்ற போது, வடஆற்காடு என்று அழைக்கப் பட்டு வந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு மேல்விஷாரம் நகரங்கüல் வாழ்ந்த முஸ்லிம்கள், தோல் தொழிற்சாலைகளை நிறுவினர். இதனால், தொழில் முனைவோருக்கு வருவாய் வந்ததோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைக்க வேலை வாய்ப்புகள் கிடைத்தன.

வாணியம்பாடியின் பொருளாதார வளர்ச்சியால் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தது என்பதற்கு சில உதாரணங் களைக் காணலாம். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாணியம்பாடியில் உள்ள முஸ்லிம்கள் தொலை நோக்கோடு முஸ்லிம்கள் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்லாமியக் கல்வி அறக் கட்டளையை ஆரம்பித்தனர். அதன் வழியே ஓர் உயர்நிலைப் பளளியையும், மேல்படிப்பிற்காக இஸ்லாமியா கல்லூரியையும் ஆரம்பித்தனர். ராஜகிரியிலிருந்து ஒருவர் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இஸ்லாமியாக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க வருபவருக்கும் இந்தக் கல்லூரி உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமல்ல, ஆம்பூர், திருப்பத்தூர் வாசிகளுக்கு மட்டுமல்ல, வெளிமாவட்ட, வெளி மாநில, சிறுபான்மையினருக்கு மேல்படிப்பு கற்க வாய்ப்பளித்தது.

வாணியம்பாடி முஸ்லிம்கள் வாழ் வாங்கு வாழ்ந்தனர் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, பர்தா அணிந்த பெண்கள் பொழுதுபோக்கிற்காக இந்தியாவிலேயே பிரத்யேகமாக பெண்களுக்காக பூங்கா அமைத்தனர். தோல் தொழில் இங்கு எவ்வளவு செழிப்படைந்து இருந்தது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் டேனரி கட்டிய அதன் உரிமையாளர் தங்கத்தாலான பூட்டையும், சாவியையும் அதனைத் திறந்து வைத்த ஆங்கிலேய இறக்குமதியாளருக்கு அன்பüப்பாக அளித்தாரென்றால், வாணியம்பாடி எவ்வளவு பொருளாதார செழிப்பு அடைந்திருந்தது என்பது விளங்கும். முஸ்லிம்கள் நடத்தும் தோல் கடைகளில் பல இந்து மேலாளர்கள், லெதர் டெக்னிசியன்கள், தொழிலாளர்கள் சரளமாக உருது பேசுவது கண்டால் வியப்பாக இருக்கும்.

பொருளாதார வளர்ச்சியும், கல்வியறிவும் பெற்ற வாணியம்பாடி முஸ்லிம்கள் சமூக சீர்திருத்தத்திலும் முன்னேறியிருந்தனர். தென்மாவட்டங்கüல் சில இடங் கüல் வாழும் முஸ்லிம்கள் இந்தக் காலத்திலும் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட பந்தல்கள், தோரணங்கள், மின் விளக்கு கள், ஊர்வலங்கள், வாத்தியங்கள் என்று நடைபெறும்போது, 40 ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம் திருமணங்கள் எளிமையா குறித்த நேரத்தில் பள்ளிவாசலில் நடைபெற்று வந்தன. பள்ளிவாசலில் நடைபெறும் திருமணத்திலும், பின்னர் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும் சக விருந்திலும், பல இந்து நண்பர்கள் கலந்துகொள்வது இங்குள்ள சமூக ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும். வாணியம்பாடி என்றால் எப்படி தோல் தொழில் நினைவிற்கு வருகிறதோ அதைப் போன்று இங்கு தயார் செய்யப்படும் பிரியாணியும் பெயர் பெற்றதாகும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடைசி யாக இங்கு வந்தபோது பிரியாணியை சாப்பிட்டு விட்டு இது போன்ற சுவையான பிரியாணியை இதுவரை சாப்பிட்டதில்லை என்று கூறி அதனைத் தயார் செய்த சமையல்காரரை தன்னுடன் விமானத்தில் அழைத்துச் சென்று, அவர் இறக்கும் வரை அவரது வீட்டில் சமையல் செய்துவத்தாரென்றால் வாணியம்பாடியில் தயாராகும் பிரியாணியின் சிறப்பு விளங்கும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தோலாடை உற்பத்தியாகும் நகரங்களில் வெவ்வேறு தோல்கள் உற்பத்தி செய்யப் பட்டன. வாணியம்பாடியில் செம்மறி ஆட்டுத்தோலும், ஆம்பூரில் வெள்ளாட்டுத் தோலும், பேர்ணாம்பட்டில் மாட்டுத்தோலும், மேல்விஷாரம், ராணிப்பேட்டையில் கன்றுத் தோல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்ற நாடுகளிலும், வட இந்தியாவிலும் உள்ள ஆட்டுத் தோல் களை விட, மதுரை கசாயில் கிடைக்கும் செம்மறி ஆட்டுத் தோல் தான் உலகிலேயே கிடைக்கும் ஆட்டுத் தோல்கüல் மிகவும் சிறந்தவை. மதுரையும் அதன் சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் தோல் பதனிடப்பட்டு ஒப்பனை செய்தபின் மிகவும் மென்மையாக இருப்பதுடன், உறுதியாகவும் அழுத்தமாகவும் இருக்கும். பெண்கள் காலணி செய்வதற்கும், தோல் ஆடைகள் தயாரிக்கவும் மிகவும் சிறந்தவை.

கடந்த ஏழு ஆண்டுகளாக வெüநாட்டி லிருந்து தோல் ஆடைகளுக்கு வரும் ஆர்டர்கள் மிகவும் குறைந்து விட்டன. எனவே இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தோல் ஆடைகள் குறைந்தன. பல தோலாடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் மூடப்பட்டு விட்டன. இந்த நிறுவனங்களு க்கு ஒப்பனை செய்யப்பட்ட தோல்களை சப்ளை செய்யும் வாணியம்பாடி தோல் கடைகள் மிகவும் பாதிக்கப்பட்டன. தினமும் 20லி25 லாரிகளில் வெளியூரிலிருந்து பச்சைத் தோல்கள் வாணியம்பாடிக்கு வரும். அது இன்று நான்கு, ஐந்து என்ற நிலைக்கு வந்துள்ளது. மற்ற மாநிலங்கüலும் தோல் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. வாணி யம்பாடியில் நிலைமை மோசமானதற்கு மற்றொரு காரணமாகும். கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு 45 ரூபாயிலிருந்து 39 ரூபாய்க்கு வீழ்ந்தது. பல நிறுவனங்கள் நஷ்டத்திற்குள்ளான. கடந்த ஏழு ஆண்டுகளில் வாணியம்பாடி யில் தோல் தொழில் தொடர்ந்து தொய்வு கொண்டதால் பல குடும்பங்கள் வாணியம் பாடியிலிருந்து மாற்றுத் தொழில் செய்யும் நோக்கோடு பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என்று குடிபெயர்ந்தன.

உலகளவில் தோல் ஆடைகளுக்கான தேவைப்பாடு பல காரணங்களால் குறைந்து விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகüல் உள்ள நுகர்வோர் ஒரு காலத்தில் ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தோலாடைகள் வாங்வர். தற்போது அவர்கள் இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒன்று வாங்கினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. தோலாடைகளை நவீன முறையில் டிரைகிளினீங் செய்வதும் இதற்கு உதவியது. தோல் அல்லாத சிந்தடிக் பொருள்களால் ஆடைகள் செய்து குறைந்த விலையில் வெüநாட்டு சந்தைகளில் விற்கப்படுகின்றன. வாணியம் பாடி தோல் தொழிற்சாலைகள் தொய்வு அடைந்ததற்கு சீனாவும் ஒரு காரணம். மிகக் குறைந்த விலையில் தோலாடைகள் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்து, இந்தியாவை பல சந்தைகளிலிருந்தும் விரட்டியடித்து விட்டது சீனா.

வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் காலப்போக்கில் எண்ணிக்கையில் பெருகினவே ஒழிய, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலை களைப் போல் செங்குத்தாக வளரவில்லை. ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகள் கடந்த முப்பது ஆண்டுகளில் தோல் உற்பத்தியுடன், தோல் காலணி உற்பத்தி யிலும் ஈடுபட்டு இன்று இந்தியாவில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிலேயே தோல் காலணி உற்பத்தி செய்யும் மையங் கüல் மிக முக்கியமான நகரமாகியது. மிகுதமானவை முஸ்லிம்களால் நடத்தப் படும், 50க்கும் மேற்பட்ட தோல் காலணி தொழிற் சாலைகள், ஒரு லட்சம் பேருக்கு மேலான ஆண், பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்து பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டி வருகிறது.
கடந்த ஒரு வருடமாக வாணியம்பாடி தோல் தொழிற்சாலைகள், தோலாடை களுக்கான தோலை தவிர்த்து, தோல் காலணிக்கான தோலை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சில சிறியதாக காலணி தொழிற்சாலைகளும் வருகின்றன. இவைகள் பெருகி பெரிய தொழிற்சாலைகளாக மாறினால், வாணியம் பாடி திரும்பவும் பொருளாதார முன்னேற்றப் பாதையில் செல்ல வாய்ப்புள்ளது.

வாணியம்பாடியைச் சுற்றிலும் உள்ள மலையடிவாழ் கிராமங்கüல் காய்கள், கனிகள், பூக்கள் நிறைவாக விளைகின்றன. இவைகüன் ஏற்றுமதி இந்தியாவிலிருந்து அதிகரித்து வருகின்றது. வாணியம்பாடி யில் உள்ள முனைவர்கள் இந்தப் புதிய தொழில்கüல் முயற்சி செய்தால் பொருளாதார வளாச்சிக்கு மிகவும் உதவும். இந்த தோல் தொழிலில் சிறுபான்மையினர் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இந்தத் தொழில் கடந்த காலங்கüல் தொய்வு கண்டுள்ளது. ஒரு கமிட்டி அமைத்து இந்தத் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து சரிசெய்வது மாநில அரசின் பொறுப்பாகும்.

தோல் தொழிற்சாலைகüலிருந்து வெüயாகும் கழிவு நீரை சுத்தப்படுத்துவது வெளியில் விடுவதால் பெரும்செலவு ஏற்படுகிறது. இதில் கணிசமான தொகையை மத்திய மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால், வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் தொழில் வளர்வதற்கு மிகவும் உதவும். இங்குள்ள அரசாங்க மருத்துவமனையை மேம்படுத்துதல், கச்சேரி ரோட்டிற்கும், வளையம்பேட்டிற்கும் நடுவில் கால்வாயில் உள்ள பாலம் இடிந்து ஐந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன. செப்பனிட இங்குள்ள தமுமுகவினர் முயற்சி செய்தால் அவர்கள் ஏற்கெனவே செய்துவரும் தொண்டிற்கு மற்றுமொரு முத்தாய்ப்பாக அமையும்.

Monday, November 12, 2007

கருநாகம் புகுந்த கர்நாடகம்


சர்ஜுன்
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகவில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. 20 மாதங்கள் மதசார்பற்ற (?) ஜனதாதளத்தின் தலைமையில் ஆட்சியும், அடுத்த 20 மாதங்களுக்கு பாரதீய ஜனதா தலைமையிலும் ஆட்சி செய்வது என வாய்மொழியாக முடிவு செய்யப்பட்டது.

சந்தர்ப்பவாத தேவேகவுடா கட்சியினர் தங்களுக்கு வாக்களித்த மக்களை மடையர்களாக எண்ணிக்கொண்டு மதவாத பாஜகவுடன் கை கோர்த்தனர். 20 மாதங்கள் முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த தேவேகவுடாவின் புதல்வர் குமாரசாமி பதவி சுகத்தில் திளைத்திருந்த வேளையில் உடுப்பியும் மங்களூரும் காவி பாசிஷவாதிகளிடம் மாட்டிக்கொண்டு திணறித் தவித்தது. அப்பாவி முஸ்லிம்கள் சொல்லொணா துயரத்திற்கு இலக்காயினர்.

மதசார்பற்ற ஜனதாதளம் என்ற பெயரில் கட்சி நடத்துபவர்கள் வைத்துக் கொண்ட வெட்கங்கெட்ட கூட்டணியால் இத்தகைய அவலம் நடந்தது. மதசார்பற்ற ஜனதாதளம் தனது கொள்கையைக் காற்றில் பறக்கவிட, பாஜக கொள்ளை பிடிப்பு பிசகாமல் நடந்து கொண்டது. அதோடு கர்நாடகாவை குஜராத்தாக மாற்றுவதே தமது இலட்சியம் என்றும் முழங்கினார்கள்.
பலதரப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மதசார்பற்ற(?) ஜனதா தளம், மக்களின் பார்வையில் மிகவும் இழிந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

'முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது பன்முக நடிப்புத் திறமையைக் காட்டியதன் மூலம் ஆஸ்கார் விருது கூடப் போதாது இவரின் திறமைக்கு'' என தொழில் முறை நடிகர்கள் கூட மூக்கில் விரலை வைத்தனர்.பாஜகவினர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாநிலத்தை சுரண்டி காவிக் காடாக்கி கலவரப் பிரதேசமாக்கினர். மதசார்பற்ற ஜனதாதளத்தின் காலம் முடிந்த பிறகு பாஜகவின் வன்முறை என காவிப்பட்டாளம் ஆவலோடு காத்திருந்தது.பதவியைப் பிரிய மனமில்லாத தேவேகவுடா கட்சியினர் பாஜகவைப் பற்றி புதிதாக அறிந்து கொண்டதைப் போல, மதவாத கட்சி என்றும், கலவர பூமியாக கர்நாடகாவை மாற்றப் போகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

முதன்முறையாக தென்னிந்தியாவில் ஆட்சியமைக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்ற தவிப்புடன் பாஜக கிடந்து அல்லாட வேறு வழியில் முதல்வர் பதவியை பெற முடியுமா என மதசார்பற்ற (?) ஜனதா தளம் வெறியுடன் திண்டாட இந்திய ஜனநாயகத்தை இழிவுப்படுத்திய பெருமைக்கு (!) இவ்விரு தரப்பினரும் ஆளானார்கள். சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக டெல்லியிருந்து தினமும் புறப்பட்டு வந்த பாஜக தலைவர்கள் தேவேகவுடா தரப்பினரை தாஜா செய்வதை தொடர்ந்தனர். அது பாஜகாவா இல்லை 'தாஜா'வா என்று சந்தேகம் எழுப்பும் அளவுக்கு அவர்களது நடவடிக்கை இருந்தது. தேவேகவுடா குடும்பம் நாசமாக போகட்டும் என கிராமத்துக் மூதாட்டி போல சாபம்விட்டனர் பாஜகவினர்.

தற்போது திரை மறைவில் நடந்த பேரங்களால் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தேவேகவுடா கட்சி ஆதரவு வழங்குவதோடு அமைச்சரவையிலும் இடம் பெறப்போகிறது. முதல்வராக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான எடியூரப்பா முதல்வராகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அத்வானிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் முகமெல்லாம் மலர்ச்சி அகமெல்லாம் பூரிப்பு.சமூக நீதிக்கான தளமாக இருந்த கர்நாடகாவில் கருநாகப் பாம்பு குடி புகுந்ததைப் போன்று காவி பாசிஷ வாதிகள் அரசமைத்து விட்டனர்.உலகம் மறக்க முடியாத பாசிஷ பயங்கரவாதிகள் இவர்கள் என்பதை காந்தியாரின் படுகொலையும், பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பும், குஜராத் இனப்படுகொலையும் நிரூபித்திருக்கிறது.

கர்நாடகத்தின் சமாதானத்தை சாய்க்க வடநாட்டில் தங்கள் தளங்களை இங்கு இழந்தவர்கள் இங்கு வந்துவிட்டனர். பதவிக்காக பாசிஷவாதிகளுக்கு பல்லக்கு தூக்கியவர்களுக்கு வாக்களித்தோமே என வேதனையில் விம்முகிறார்கள் சிறுபான்மை சமூகத்தினர்.சந்தர்ப்பவாத சதிகாரர்களுக்கும் பாசிஷ பயங்கரவாதிகளுக்கும் வாக்குச்சீட்டின் மூலம் பதிலடி கொடுக்க அவர்கள் தயாராகி வருகிறார்கள்.

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் ஜனநாயகம்

சர்ஜுன்
பாகிஸ்தானில் பெயரளவுக்கு இருந்த ஜனநாயகம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டிருக்கிறது. எதிர்ப்பவர்கள் எவரும் இன்றி அதிபர் தேர்தலில் முஷாரஃப் ஜனநாயக (?) முறையில் வெற்றி பெற்ற பின்னரும் கூட நடுங்கி நிதானம் இழந்து அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஜனநாயகம் என்பது எட்டாக்கனியாக இருந்தது மேலும் எட்டாத உயரத்தில் போய் விட்டது.

பாகிஸ்தான் என்றால் முஷாரஃப், பெனாசிர், நவாஸ்ஷரீஃப், அமெரிக்கா, தலிபான் ஆதரவாளர்கள் என்று கலவையான குழப்பம் என்ற நிலைமாறி பாகிஸ்தானில் மக்களின் ஜனநாயக விழிப்புணர்வு, நீதித்துறையின் சுறுசுறுப் பான செயல் பாடுகள் என மாறியதால் பழைய பாகிஸ்தானாக அது தற்போது இல்லை.

மதரஸா மாணவர்களிடையே இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசையே எதிர்க்கும் அளவிற்கு அவர்கள் சென்றனர்.

இஸ்லாமிய நெறியை பரப்ப, புரிந்து கொள்ள அவர்கள் காட்டிய விவேகமற்ற வேகம் சர்ச்சைக்குள்ளாகி லால் மஸ்ஜி தில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரைக் குடித்தது.

அரசும், மதரஸாக்களின் தலைமைப் பீடங்களும் நிதானம் இழந்து செயல் பட்டதின் விளைவு இரு தரப்புக்குமே தோல்வியாக முடிந்தது.
நீதித்துறையின் சுறுசுறுப்பான செயல் பாடு பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் சவுத்ரி, நீதியை நிலை நாட்டும் முகமாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ஆடித்தான் போனார் அதிபர் முஷாரஃப்.

பாகிஸ்தானின் மாற்றங்கள் ஏற்றங் களை நோக்கிச் சென்றாலும், தமது அதிகார வரம்புக்கு ஏமாற்றங்களையே பரிசாக அளிக்கும் என்பதை உணர்ந்து கொண்டார்.
பெனாசிருடன் வைத்துக் கொண்ட ரகசிய அதிகார பகிர்வு குறித்த உறவும் கராச்சி குண்டு வெடிப்பு சத்தத்தில் மாயமாய் மறைந்து போனது.

பாகிஸ்தானில் முஷாரஃபின் பிடி நழுவியதோடு இந்த துணைக் கண்டத் தில் அமெரிக்காவின் பிடி நழுவும் போக்கு நாளோருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யா, சீனா, உஸ்பெ கிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தி இப்பிராந்தியத்தில் சீனாவும், ரஷ்யாவும் வலுப்பெறுவதை அமெரிக்கா வெளிப் படையாகக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், உள்ளூர நடுக்கத்துடன் தன் கைவசம் உள்ள பாகிஸ்தானை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு பாகிஸ்தானின் ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க மறைமுக காரண மாகவே மாறிவிட்டது.

இந்தியாவில் அணு ஆற்றல் ஒப்பந்தத் தில் மறைமுக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் முஷாரஃபை கொம்பு சீவி விட்டிருக்கிறது விளைவு பாகிஸ்தான் ஜனநாயகம் அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது.

நாளை அது புதைபொருள் ஆராய்சிக் குரிய ஒன்றாக மாறக்கூடும்.
பாகிஸ்தானின் ஒற்றைத் தனி மனிதராய் முஷாரஃப் விளங்குகிறார். அவருக்கு ஆத்மார்த்தமான நட்பாக அதிபர் புஷ் மட்டுமே விளங்குகிறார். ஜனநாயகம் என்பது இவர்கள் இருவரின் நட்பு மட்டும் அல்லவே!

பாகிஸ்தான் இன்று எரிமலையாய் தகித்துக் கொண்டிருப்பதாகவே அங்கி ருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எரிமலையின் மேலிருந்து மகுடி வாசிக்கும் முஷாரஃபை நினைத்தால் பரிதாபம் ஏற்படுகிறது.

வேண்டாம் பாலியல் கல்வி!வேண்டும் ஒழுக்கக் கல்வி!!

மத்திய அரசாங்கம் வரும் கல்வி ஆண்டு முதல் யூனிசெப் (UNICEF) அமைப்பால் வடிவமைக்கப்பட்ட வளர் இளம் பருவத்தினருக்கான கல்வி திட்டத்தை வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. வெங்கையா நாயுடு தலைமை யில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் கருத்துகள் அறியப்படுகிறன. பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்திட வேண்டுமா வேண்டாமா? என்பதற்கான சர்ச்சைகள் வலுவடைந்து வரும் சூழ்நிலையில் பாலியல் கல்வி வேண்டும், பாலியல் கல்வி இல்லையென்றால் மாணவர்களும், இளம் பருவத்தினரும் வழி கெட்டு விடுவார்கள் என்ற பிரச்சாரம் வெகுஜன ஊடகங் களாலும் சில தன்னார்வ அமைப்புகள், அறிவு ஜீவிகள் சிலரால் முன்வைக்கப் பட்டு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

பாலியல் கல்வி இல்லாத காரணத்தால் என்னவோ இளைய தலைமுறையும் மாணவர்களும் சீரழிந்து வருவதை போலவும் அல்லது மாணவர்களின் பெற்றோர்களும், சமூக அமைப்புகளும் வீதியில் இறங்கி பாலியல் கல்வி வேண்டும் என்று போராட்டம் நடத்து வதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக் கிறார்கள் இவர்கள் பாராம்பரியம் கொண்டிருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது. இந்தியாவில் எச்.ஐ.விலியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா வில் 53% குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நம்மை அதிர வைக்கின்றன.

இவைகளை களைய வேண்டு மென்றால் பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு ஏற்கத் தக்கது அல்ல. ஏற்கனவே திரைப்படம் ஆபாசப் படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள் என்று மாணவர்களை மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்து தரப்பினர்களையும் தரம் கெடுப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் செக்ஸ் கல்வி என்ற பெயரில் தெரியாத விஷயங்களையும், இன்னும் தெளிவாக சொல்லிக் கொடுத்து மாணவர்களை வழி தவற வைக்கப் போகிறார்களா?

எந்த ஒரு விஷயமும் தானாக அறிய வேண்டிய வயதில் அறிந்து கொள்வது தான் நல்லது. நமது முன்னோர்கள் எல்லாம் எந்த செக்ஸ் கல்வியை படித்தார்கள்? இன்று இருக்கும் வக்கிர புத்தியுடைய மனிதர்களை விட அவர்கள் மிக நல்லவர்களாத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். சிறு வயதில் பள்ளிப் பாடங்களை படிப்பதற்கே நேரமற்ற சூழ்நிலையில், பல பள்ளிகளில் தரமான அடிப்படைக் கல்வி, சுகாதாரமான கல்வி வளாகங்கள் ஏன் ஆசிரியர்கள் கூட இல்லாத அவல நிலை நாடு முழுவதும் நிலவிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் 'செக்ஸ் கல்வியை' கற்றுக் கொடுக்கவே என்ன நிர்பந்தம் வந்து விட்டது அரசுக்கு.

செக்ஸ் கல்வியை கொண்டு வரலாமா என்று மாணவர்களிடமே ஆலோசனை கேட்பது தான் இன்னும் வேடிக்கை. தங்களுக்கு முழுமையான அறிவு இல்லாத விஷயத்தை பற்றி அவர்களால் எப்படி சரியான கருத்தை சொல்ல முடியும். நமது நாட்டில் பல்வேறு முனைகளிலிருந்து தாக்கி வரும் கலாச் சார சீர்கேடுக்கான ஆபாச சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர்கள், புத்தகங்கள் என இவற்றை தடை செய்வதை விட்டு விட்டு 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற ரீதியில் அரசு செயல் படுவது பொறுப்பற்ற தன்மையாகும்.

பள்ளிகளிலே நடைமுறையில் இருந்து வந்த நீதி போதனை வகுப்புகளை இன்று பல பள்ளிகளில் நடத்தப்படுவதே இல்லை. நன்னெறி வகுப்புகளை மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயப்படுத்த வேண்டும். இருபாலர் பயிலும் முறை களை தடை செய்ய வேண்டும். ஒழுக்கக் கல்வி மூலமாகவே மாணவர்களை கலாச்சார சீர்கேட்டிலிருந்து காக்க முடியும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண், பெண் உயவியல் நிபுணர்களை மாணவர் தொடர்பு அலுவலராக நியமிக்கலாம்.

திருமணத்தை எதிர் நோக்கியுள்ள வர்கள், திருமணம் ஆன இளம் தம்பதியர்கள் இவர்களுக்கு சரியான பாலியல் அறிவை நிபுணர்கள் மூலம் கற்றுத் தருவதே நலம் பயக்கும்.
மேலை நாடுகளிலே இத்தகைய பாலியல் கல்வி திட்டங்களால் கிடைத்த பலன் என்ன? மேற்கத்திய நாடுகளில் டீன்லிஏஜ் வயதிலுள்ள மாணவ லி மாணவியர்கள் சகஜமாக உறவு கொள்வதும், அதனால் ஏற்படும் கருக்கலைப்புகளின் சதவீத எண்ணிக்கையும், செக்ஸ் கல்வி, கோ எஜுகேஷன் என்று இவர்களின் மேலைநாட்டு மோகங்களின் வெளிப்பாடு களை சிதற அடிக்கின்றன. மேலை நாடுகளிலே தோல்வி கண்ட திட்டங் களை தடுத்து நிறுத்த வேண்டியது இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.

பாலியல் கல்வி தொடர்பான எண்ணங்களையும் கருத்துக்களையும் அனுப்பி உங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யுங்கள்.
Shri. J.Sundrial
Joint Secretary, Rajya Sabha Secretariat
Parliament House annexure,
New Delhi - 110001
Fax : 011-23012007
Email : sundrial@sunsad.nic.in

மோடியை தூக்கில் போடு - குமுதம்

கேள்வி: தெஹல்கா தோலுரித்துக் காட்டிய குஜராத் கலவர உண்மைகள் குறித்து?
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (அது ஒரு விபத்து என்று முடிவானது வேறு விஷயம்) நடந்து முடிந்தவுடன் முஸ்லிம்களைப் பழிவாங்கும் திட்டம் அங்கிருந்த மத வெறியர்களிடம் தோன்றி விட்டது. அவர்களுக்குத் தேவை யெல்லாம் தலைவர் மோடியின் கண்ணசைவுதான். வந்தார் மோடி போலீஸை அழைத்து அவர்களை 'கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள், அல்லது இவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களை அடித்துக் கொல்லுங்கள்' என்று கட்டளையிட்டார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு அப்புறம் மகா கோரமான இனப்படு கொலை ஆரம்பித்தது. மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் வெறியுடன் பாய்ந்தன. படுகொலைகளை, கற்பழிப்புகளை, உடல் உறுப்புகளை அறுத்து எறிந்ததை எவ்வளவு ஆனந்தத்துடன் தெஹல்கா விடம் சொல்கிறார்கள் அந்தக் கொலை காரர்கள் ('ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையைக் கொன்றேன்'). ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர் ரத்த வெறி பிடித்த வானரப் படையைத் தூண்டிவிட்டு ஆயிரக்கணக் கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொடூரம் காந்தி பிறந்த மாநிலத்திலா நடந்தது? எத்தனை பேர் அந்தப் படுகொலைகளை சைக்கோத் தனத்துடன் விவரிக்கிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்த சம்பவங்களை அசை போடுகிறார்கள். ஒருவர் சொல் கிறார் ''மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்''. கொலைகாரர்களை வீடு தேடி வந்து பாராட்டிய ஒரு வெறிநாய், முதல்வர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. மோடி இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை..


நன்றி குமுதம் (7.11.2007)

ஆதம்பாலம் தானாக உருவான மணல் திட்டு - வரலாற்றுப் பேராசிரியர் ஏ.ராமசாமி பேட்டி

ஆதம்பாலம் தானாக உருவான மணல் திட்டு இராமர் கட்டியதாகக் கூறுவது கட்டுக்கதை வரலாற்றுப் பேராசிரியர் ஏ.ராமசாமி பேட்டி
சேது சமுத்திரம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் ஆதம் பாலம் தானாக உருவானது தான்; அதில் மனிதர்கள் நடந்து சென்றதற்கான ஆதாரமே இல்லை என்று வரலாற்றுப் பேராசிரியரும், தமிழக உயர் கல்விக்குழுத் துணைத் தலைவருமான ஏ. ராமசாமி கூறினார்.

வங்கக்கடல் பகுதியில் இருந்து செல்லும் கப்பல்கள்; கேரளம் உள்ளிட்ட அரபிக் கடல் பகுதியை சென்றடைய இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் காலவிரயம், பொருள் விரயத்தைத் தடுக்க இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே கால்வாய் (சேது சமுத்திரத் திட்டம்) அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இத்திட்டத்துக்காக ஆதம் பாலம் அல்லது ராமர் சேது பாலம் என்றழைக்கப்படும் மணல் திட்டுக்களை அகற்றக்கூடாது என்று மதவாத சக்திகள் எதிர்க்கின்றனர். இந்த நிலையில் ஆதம்பாலம் குறித்து தமிழ்நாடு உயர் கல்விக்குழு துணைத் தலைவரும், வரலாற்று துறையில் டாக்டர் பட்டம் பெற்றவருமான ஏ. ராமசாமி ஆதம் பாலம் பற்றி ஆராய்ந்து, ஒரு தொகுப்பினை தயாரித்துள்ளார்.

அது குறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதற்காகத் தான் இது பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தோம். ஆதம் பாலம் என்ற ஒன்று எப்படி உருவானது; அது இருந்ததா? அந்த பாலம் ராமருடன் சென்றதாகக் கூறுப்படும் வானர சேனையால் கட்டப்பட்டதாக என்ற கோணத்தில் இந்த ஆய்வு மேற்கொண்டோம். ராமாயணம் பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், ராமாயணம் நடந்த இடமாகக் கூறப்படும் அயோத்தியில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கவில்லை; அங்கு வெறும் காடுகளே இருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.

3 கர்நாடக போர்கள் நிகழ்ந்ததற்குப் பிறகு, 1763 ஆம் ஆண்டில் ராபட்பாக் என்ற கவர்னர் பதவியில் இருந்தார். அவர் காலத்தில் ஆதம் பாலம் சர்ச்சை தொடங்கியது. அப்போது லெப்டினன்ட் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்ற ராணுவ என்ஜினீயர் ஒருவரை, தனுஷ் கோடி தலைமன்னாரை இணைக்கும் ஆதம் பாலம் எனப்படும் மணல் திட்டுக்களை பற்றி ஆய்ந்து வருமாறு பாக் உத்தரவிட்டார்.
அந்த ஆளுநரின் பெயராலேயே பாக் ஜலசந்தி என்று அப்பகுதி அழைக்கப் படுகிறது. அதுபோல், ஆங்கிலேய குழுவில் இருந்த ஆதம் என்ற ஆராய்ச்சியாளரின் பெயரால் ஆதம்பாலம் என்று அது அழைக்கப்பட்டிருக்கக்கூடும். இதுதான் விஞ்ஞான ரீதியாக அங்கு மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு ஆகும்.இதுபோல், மனிதனின் தொண்டைக்கு அருகில் முன்கழுத்துப் பகுதியில் உள்ள உறுப்புக்கு ஆதம்ஸ் ஆப்பிள் என்று பெயர். இது தலையையும், உடலையும் இணைக்கும் முக்கிய பகுதி ஆகும். இதுபோல், இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கப்பதுபோல் இப்பாலம் உள்ளதால், 'ஆதம் பாலம் என்று பெயரிட்டு இருக்கலாம் என்று ஐதராபாத்தில் உள்ள மத்திய தொலையுணர்வு ஆய்வு நிறுவன அதிகாரி பெருமாள் கூறுகிறார்.

1891 ம் ஆண்டில் ஜெர்மனியை சேர்ந்த ஜோஹன்னாஸ் வால்டர் என்ற ஜெர்மானியர், தனக்கு முன்பு ஆய்வு செய்தவர்களின் குறிப்புகளை வைத்துக் கொண்டு ஆதம்பாலத்தை நேரடியாக பார்த்து ஆய்வு செய்தார். அவர், பருவகால மாற்றம், கடல் நீரோட்டம், கடற்கரையில் இருந்து வந்த மணல் திட்டுகள் உருவாயின, கடல்மட்டம் உயரும்போது அவை மறைந்துவிடுகின்றன; குறையும்போது திட்டுகள் மேலே வருகின்றன என்று கூறியுள்ளார். வால்மீகி ராமாயணத்தல் உள்ள வரிகளை விரிவாக குறிப்பிடும் அவர், ஆதம் பாலத்தை வானரர்கள் கட்டினார்கள் என்பது ஒரு கட்டுக்கதை என அவர் தனது புத்தகத்தில் கூறிப்பிட்டுள்ளார்.ஆதம் பாலம் என்பது மணல் திட்டுகளால் ஆன ஒன்று. அது நிரந்தரமானது அல்ல. அந்த காலத்தில் இலங்கையில் இருந்தும், இங்கிருந்தும் மன்னர்கள் கப்பலில்தான் இருநாடுகளுக்கும் சென்று வந்தார்கள்.

ராமர் பாலம் இருந்திருந்தால் அதிலேயே அவர்கள் சென்றிருப்பார்கள். சேது பாலத்தில் மனிதர்கள் நடமாடியதற்கான ஆதாரமே இல்லை. பிரிட்ஜ் என்றால் பாலம் என்று மட்டும் அர்த்தம் அல்ல. நிரப்புதல், இணைப்பு என்ற அர்த்தமும் உண்டு. அதனால் இணைப்புப் பகுதி என்ற அளவில், ஆதம் பிரிட்ஜ் என்றழைப்பதில் தப்பில்லை. ராமர் பாலம் என்றழைக்கப்படும் திட்டுகள் 32 ஆயிரம் மீட்டர் நீளம் உள்ளது. சேது சமுத்திரத் திட்டத்துக்கு 300 மீட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் பெரிதாக பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டு விடாது. இவ்வாறு ராமசாமி கூறினார்.